Sunday 26 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-04-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நேபாள நிலநடுக்கம் பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

காட்மண்டு/புதுடெல்லி, ஏப்ரல் 26,2015,
நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
அழகான நேபாளம் நாட்டை நிலநடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்திஉள்ளது. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது.
இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி 1500 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகின.
                                                                                                       மேலும்....

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமரிடம் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஏப்ரல் 26,2015,
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.
பிரதமருடன் சந்திப்பு
‘நிதி ஆயோக்’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்திருந்த தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதம் ஒன்றை பிரதமரிடம் அவர் அளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
                                                                                                            மேலும்....

ஆபாச படம் எடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, ஏப்ரல் 26,2015,
பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பிரகாஷ் 13 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி அவரை விடுதலை செய்வதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து டாக்டர் பிரகாஷ் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
ஆபாச படம்
பிரபல மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால், ‘செக்ஸ் டாக்டர் பிரகாஷ்’ என்றால், தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த அளவுக்கு டாக்டர் பிரகாஷ் பிரபலமானவர்.
இவர், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார் என்று 2001-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. புதுச்சேரியை சேர்ந்த கணேசன் என்பவர் வடபழனியில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்து, டாக்டர் பிரகாஷ் நடத்திய ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர், வடபழனி போலீசில், தன்னை பல பெண்களுடன் கட்டாயப்படுத்தி உறவுக் கொள்ளச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக டாக்டர் பிரகாசுக்கு எதிராக புகார் செய்தார். இதுகுறித்து அப்போதைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து, 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டாக்டர் பிரகாஷை கைது செய்தார்.
தம்பி மீது வழக்கு
இதையடுத்து டாக்டர் பிரகாசின் கூட்டாளிகளான சரவணன், விஜயன், நிக்சன், ஆசீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                        மேலும்....

‘2 ஆண்டுகளில் மோனோ ரெயில் ஓடும் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள்’ கருணாநிதி தாக்கு

சென்னை, ஏப்ரல் 26,2015,
2ஆண்டுகளில் மோனோ ரெயில் ஓடும் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோனோ ரெயில்
2011-ம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த கவர்னர் உரையில் “சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட “மோனோ” ரெயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தது.
அதற்கு பிறகு ஜெயலலிதா வழிகாட்டுதல் படி; 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைய முதல்-அமைச்சர், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார். கண்டறிந்தார்களா? என்ன ஆயிற்று அந்தத்திட்டம்?
                                                                                                         மேலும்....

Tuesday 14 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் பெயர் பட்டியலை 22-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு கட்டளையிட்டு இருக்கிறது

புதுடெல்லி, ஏப்ரல், 14,2015,
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், கடந்த 7-ந் தேதி செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 20 தமிழர்களை அந்த மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர்.
முக்கிய சாட்சிகள்
இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேரில் பார்த்த சாட்சியாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கருதப்படுகிறார்.
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு தான் பஸ்சில் சென்றபோது, ஆந்திர போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தி 7 பேரை பிடித்துச் சென்றதாகவும், பெண்கள் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் தான் தப்பியதாகவும் அவர் கூறினார். இதேபோல் பாலசந்திரன் என்பவரும் இந்த சம்பவத்தில் முக்கிய சாட்சியாக விளங்குகிறார். இதனால் முக்கிய சாட்சிகளான இவர்கள் இருவரையும் மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்து உள்ளனர்.
சாட்சியம் அளித்தனர்
இந்த நிலையில் சேகரும், உயிர் தப்பிய மற்றொரு தொழிலாளியான பாலசந்திரனும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று காலை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பாலகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரும், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தங்களுக்கு தெரிந்த விவரங்களை சாட்சியமாக அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
                                                                                            மேலும்....

ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து ‘தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சி, குறையாத மகிழ்ச்சி வழங்கும் ஆண்டாக விளங்கட்டும்’


சென்னை, ஏப்ரல், 14,2015,
‘தமிழக மக்களுக்கு ஏற்ற மிகு வளர்ச்சியையும், குறையாத மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு விளங் கட்டும்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்த்து
தமிழ் புத்தாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ‘தமிழ் புத்தாண்டு’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                                               மேலும்....

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த திராவிடர் கழகத்துக்கு அனுமதி

சென்னை, ஏப்ரல், 14,2015,
தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திராவிடர் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பினை போலீசார் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தடையை நீக்க வேண்டும்
டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14-ந்தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்த திட்டமிட்டோம்.
                                                                                                   மேலும்....

சென்னையில் பயங்கரம் பள்ளிக்கூட சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி

சென்னை, ஏப்ரல், 14,2015,
சென்னையில் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள். இன்னொரு மாணவி உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
250 ஆண்டு பழமையான பள்ளி
சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் உள்ள அவ்வை இல்ல தொண்டு நிறுவன பள்ளியில்தான் இந்த நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் நடந்தது. 250 ஆண்டுகள் பழமையான இந்த தொண்டு நிறுவனம் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. இங்கு செயல்படும் ராமமூர்த்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 822 மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் 165 பேர் பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறார்கள்.
நேற்று பகல் 12.30 மணி அளவில் வழக்கம்போல பள்ளி மதிய உணவுக்கு மணி அடிக்கப்பட்டது. மாணவிகள் சிட்டாய் பறந்து பள்ளி அறையை விட்டு வெளியில் வந்தார்கள். குறிப்பாக 8-வது படிக்கும் மாணவிகள் மோனிஷா, நந்தினி, சந்தியா ஆகிய 3 பேரும் ஒன்றாய் வந்தனர். பள்ளி காம்பவுண்டு சுவரையொட்டி உள்ள கழிவறைக்கு சென்றனர்.
சுவர் இடிந்து விழுந்தது
அப்போது பள்ளியின் 8 அடி பழமையான காம்பவுண்டு சுவர் இடிந்து திடீரென்று விழுந்தது.
                                                                                        மேலும்....

Tuesday 7 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2015) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்க வருகிற 15-ந்தேதி வரை சுப்ரீம் கோர்ட் தடை

புதுடெல்லி, ஏப்ரல். 07-04-2015,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பளிக்க தடையில்லை இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார்.
                                                                                                    மேலும்....

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் வேளாண் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய மேலும் 8 பேர் கைதாகிறார்கள்


வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவ்வழக்கில் மேலும் 8 பேர் கைதாவார்கள் என்று தெரிகிறது.
சென்னை, ஏப்ரல். 07-04-2015,
நெல்லை வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்த முத்துக்குமாரசாமி, ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வழக்கை சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது
அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே கேட்
                                                                                                   மேலும்.... 

தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு திருச்சி அரசு மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி அரசியல்வாதிகள் தொல்லை காரணமா?

திருச்சி, ஏப்ரல். 07-04-2015,
திருச்சி அரசு மருத்துவ அதிகாரி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவ அதிகாரி
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அதிகாரியாக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் டாக்டர் நேரு. இவரது வீடு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றிவந்த அவர் 2 மாதங்களுக்கு முன்பு தான் அங்கு இருந்து பணிமாறுதலில் திருச்சி வந்தார்.
                                                                                                       மேலும்....

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை

திருமலை, ஏப்ரல். 07-04-2015,
தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.
ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த செம்மரக்கட்டைகளை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர்.
இதனால் ஆந்திர செம்மரக்கட்டைகள் ஒரு டன் ரூ.10 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. கொஞ்சம் செம்மரக்கட்டை கடத்தி விற்றாலும் லட்சாதிபதி ஆகி விடலாம் என்பதால் திருப்பதி வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தல்காரர்கள் போட்டி போட்டு வெட்டி கடத்துகிறார்கள்.
சமீபகாலமாக செம்மரங்களை கடத்தி வெட்டும் நடவடிக்கைகளில் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏழை தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
நிறைய பணம் கிடைப்பதால் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த
                                                                                                 மேலும்....

Thursday 2 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (02-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (02-04-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்பு விமானப்படை விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானப்படை விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி, ஏப்ரல், 02-04-2015,
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.
கிளர்ச்சியாளர்கள்
அவர்கள், ஏமன் நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்ட பெரும் பகுதியை கைப்பற்றி விட்டனர். அதனால், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதி, தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டார். முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து உள்ளன.
இந்தநிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டு, அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதியின் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை கொண்டு வருவதற்காக, சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதலைத் தொடங்கின.
                                                                                                       மேலும்....

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றிய பேச்சால் அவையில் அமளி தி.மு.க. வெளிநடப்பு

சென்னை, ஏப்ரல், 02-04-2015,
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
செலவு கணக்கீடு
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்களுக்கு, பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உறுப்பினர் துரைமுருகன் (தி.மு.க.), தலைமை நிதி கணக்காயரின் அறிக்கையை வைத்துக்கொண்டு இந்த கூட்டத்தில் சில கருத்துக்களை கூறினார். எந்த ஒரு அரசும் துல்லியமாக செலவுகளைக் கணக்கிட்டு ஒதுக்கீடு செய்து, சேமிப்பே ஏற்படாமல் முழுமையாக செலவு செய்துவிட முடியாது. எல்லா அரசு நிதி நிர்வாகத்திலும் இவ்வாறு சில இனங்களில் நிதி திரும்ப ஒப்புவிப்பு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று.
இதில் நிதி ஒதுக்கம் திரும்பப்பெறுவதால் நிர்வாகமே சீர்குலைந்து விட்டது என்று
                                                                                                             மேலும்....

புதுவையில் புதிதாக கட்டப்படும் 5 மாடி கட்டிடம் சாய்ந்தது 50 குடும்பங்கள் வெளியேற்றம்

புதுச்சேரி, ஏப்ரல், 02-04-2015,
புதுவை பாக்குமுடையான்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பழனிராஜா உடையார் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
தன்ராஜ் உடையார் வீதியில் 3850 சதுர அடியில் 5 மாடிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பின் தரை தளத்தில் வாகனங்களை நிறுத்த பார்கிங் வசதி அமைந்துள்ளது.
கட்டிடத்தில் பெரும் பகுதி பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் பார்கிங் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தூண்களில் ஒன்று சேத மடைந்தது. தூணை சுற்றி உள்ள சிமெண்டு பூச்சு பெருத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது.
இதனால்
                                                                                                 மேலும்....

ரசாயன மையை தடவினால் கருப்பு தாள் பணமாக மாறிவிடும் என்று கதை சென்னையில் போலியாக வெளிநாட்டு பணம் தயாரித்த கும்பல் கைது லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, ஏப்ரல், 02-04-2015,
சென்னையில் போலி வெளிநாட்டு பணம் தயாரிப்பில் ஈடுபட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பணம் தருவதாக ஆசைகாட்டி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சந்தேகத்தின் பேரில் விசாரணை
சென்னை ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயராகவன் நேற்று முன்தினம் இரவு ஆவடி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள குறுகலான தெரு ஒன்றில் 4 பேர் நின்று சத்தம் போட்டு பேசி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயராகவன் போலீஸ் படையுடன் சென்று அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை போட்டனர்.
                                                                                                         மேலும்....
 

Wednesday 1 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (01-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-04-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளை இடிக்க உத்தரவு 9-ந்தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறி

புதுடெல்லி, ஏப்ரல், 01-04-2015,
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக கட்டப்பட்ட 3 பார்வையாளர்கள் கேலரிகளை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 புதிய கேலரிகள்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடுதலாக ஐ, ஜே, கே என்ற 3 பார்வையாளர்கள் கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த 3 கேலரிகளிலும் மொத்தம் 12 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம்.
இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்பதால் சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
                                                                                                  மேலும்....

உடன்குடி அனல் மின் திட்டத்தை ரத்து செய்ததற்கு காரணம் என்ன? சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
உடன்குடி அனல் மின் திட்டத்தை ரத்து செய்ததற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை
உடன்குடி அனல் மின்நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை விளக்கம் கேட்டன. விசாரணைக் கமிஷன் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அரசால் வெள்ளை அறிக்கை வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சிகள் கோரின.
தி.மு.க. செயல்படுத்தவில்லை
இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்து பேசியதாவது:-
                                                                                                   மேலும்....

தே.மு.தி.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் தண்டனை நீட்டிப்பு அடுத்த கூட்டத்தொடரில் 10 நாட்கள் வரை பங்கேற்க முடியாது

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி, 10 நாட்களுக்கு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
உரிமைமீறல் பிரச்சினை
சட்டசபையில் கடந்த மாதம் நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தே.மு.தி.க. சட்டமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ் தெரிவித்த சில கருத்துக்களால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது அவைக்காவலர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை நடைபெற்று வரும் கூட்டத்தொடர் முடிய இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி இந்த கூட்டத்தொடர் முடிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் சட்டசபை உரிமைக்குழு ஆய்வுக்கு விடப்பட்டது.
                                                                                          மேலும்....

அண்ணா நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் - கருணாநிதி அறிக்கை

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
அண்ணா நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது
பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்காலச் சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவு பூர்வமாகச் செழுமைப்படுத்திக்கொள்ள; நீண்ட காலத்திற்கு பயன்படுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை தி.மு.க. ஆட்சியில் நான் நிர்மாணித்தேன்.
நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றப்போகிறேன் என்று அறிவித்தார். தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு நீதி மன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமலாகாமல் உள்ளது.
குழந்தைகள் மருத்துவமனை
அ.தி.மு.க. ஆட்சி தொடங்கிய உடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில்
                                                                                           மேலும்....