Friday 31 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார் விழாவில் பிரதமர் மோடி, சிவசேனா தலைவர்கள் பங்கேற்பு




மும்பை, நவம்பர், 01-11-2014,
மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 9 மந்திரிகளுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, அத்வானி மற்றும் சிவசேனா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தனித்து ஆட்சி
மராட்டிய சட்டசபைக்கு கடந்த 15-ந்தேதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்பதால், 63 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்த தனது பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் கூட்டணி அரசை அமைக்க பா.ஜனதா முயற்சித்தது. ஆனால் சிவசேனா கடைசி வரை உடன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக 41 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்து உள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. அக்கட்சியின் ஆதரவை ஏற்பது பற்றி பா.ஜனதா முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தனித்து சிறுபான்மை அரசை அமைத்து விட்டு, பின்னர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜனதா முடிவு செய்தது.
பதவி ஏற்பு விழா
இதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக பா.ஜனதா சார்பில் 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
                                                                                                         மேலும், . . . . 

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது குற்றச்சாட்டு பதிவு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு

புதுடெல்லி, நவம்பர், 01-11-2014,
கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட 19 பேர் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தேடித்தரும் வகையில் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக, மத்திய அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளுஅம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார் ரெட்டி, பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 10 தனி நபர்களின் பெயர்களும் மற்றும் சுவான் டெலிகாம், குஸேகோன் ரியல்டி,
                                                                                               மேலும், . . . .  .

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவேண்டும் மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, நவம்பர், 01-11-2014,
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வழிவகுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
பொய் வழக்கு
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்கி கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் 2011-ம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் போதைப்பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு தொடுத்தனர்.
அவர்கள் மீன்பிடி படகில் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி, நடுக்கடலில் காத்திருந்த இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்களிடம் கொடுத்ததாக கூறி அவர்கள் 8 பேரையும் கைது செய்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் இளைஞர்கள். 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
                                                                                                                  மேலும், . . . . .

தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா காங்கிரஸ் மேலிடம் மீது ஞானதேசிகன் குற்றச்சாட்டு

சென்னை, நவம்பர், 01-11-2014,
தமிழ்நாடு காங்கிரஸ் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன், காங்கிரஸ் மேலிடம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.
பதவி விலகல்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து பி.எஸ்.ஞானதேசிகன் விலகுவதாக நேற்று திடீரென்று அறிவித்தார். மேலும் அகில இந்திய தலைவர் சோனியாகாந்திக்கும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஞானதேசிகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
                                                                                             மேலும், . . . . 

Thursday 30 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கோர்ட்டு தீர்ப்பு 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு


போதைப்பொருள் கடத்தியதாக, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
கொழும்பு, அக்டோபர், 31-10-2014,
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
5 தமிழக மீனவர்கள் கைது
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22) ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஹெராயின் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறி 5 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன், இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு
பின்னர் அவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை கொழும்பு ஐகோர்ட்டில் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா முன்னிலையில் நடைபெற்று வந்தது.
                                                                                                               மேலும், . . . . 

107-வது பிறந்தநாள் விழா: முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துக்கு கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை



சென்னை, அக்டோபர், 31-10-2014,
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தேவர் அமைப்பினர் மாலை அணிவித்தனர்.
ஜெயலலிதா மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 107-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்துக்கு,
                                                                                                        மேலும், . . . 

கோபதாபங்கள், உறவு முறையில் தடங்கல் ஏற்பட்டாலும் ‘‘டாக்டர் ராமதாஸ் மீதான அன்பு என்றைக்கும் மறைந்தது இல்லை’’ திருமண விழாவில் கருணாநிதி பேச்சு



சென்னை, அக்டோபர், 31-10-2014,
கோபதாபங்கள், உறவு முறையில் தடங்கல் ஏற்பட்டாலும், டாக்டர் ராமதாஸ் மீதான அன்பு என்றைக்கும் மறைந்தது இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
திருமணம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி ஆகியோரின் மகன் (டாக்டர் அன்புமணி-சவும்யா) வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் (ஸ்ரீகாந்தி-பரசுராமன்) வழி பேரன் ப்ரித்தீவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்லூயன்ஸ் பாங்க்குயிட்ஸ் ரிசாட்சில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, திருமண நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 9.35 மணிக்கு அங்கு வந்தார். அவரை, டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வரவேற்றனர்.
கருணாநிதியிடம் ஆசி
மேடைக்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். திருமணத்திற்கு வந்த அனைவரையும் முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி வரவேற்றார்.
அதன்பின்னர், மணமக்கள் திருமண ஒப்பந்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மணமகன் கையில் பெற்றோர்கள் தாலியை எடுத்துக் கொடுத்தனர். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
அதனைத் தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                              மேலும், . . . . 

திருமுல்லைவாயலில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 30 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆவடி, அக்டோபர், 31-10-2014,
திருமுல்லைவாயலில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இரும்பு கம்பியால் தாக்கினர்
திருமுல்லைவாயல் அண்ணாநகர் 4-வது தெருவில் வசிப்பவர் ஜெபசெல்வன்(வயது 50). அதே பகுதியில் சி.டி.எச். சாலையில் மரக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி அன்னலதா(42). இவர்களுக்கு அனிதா, சுவேதா என 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். ஜெபசெல்வன் கடைக்கு சென்று விட்டார்.
                                                                                                        மேலும், . .  . .

Wednesday 29 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

கருப்பு பணம் பதுக்கல் விவகாரம் வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ள 627 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்

கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ள 627 பேர் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
புதுடெல்லி, அக்டோபர், 30-10-2014,
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களில் பலர் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
இந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பெயர்கள் வெளியீடு
இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
                                                                                                          மேலும், . . . 

இலங்கையில் இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம் தேயிலை தோட்ட நிலச்சரிவில் 200 பேர் பலி? மீட்புப் பணியில் ராணுவம் தீவிரம்



கொழும்பு, அக்டோபர், 30-10-2014,
இலங்கை தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் சுமார் 200 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. உடல்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டருக்கு கிழக்கே படுல்லா மாவட்டம் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டத்தில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களின் வீடுகள் அந்த தேயிலை தோட்டங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளன.
                                                                                                   மேலும், . . . . 

அனுமதியின்றி பள்ளிக் கட்டிடத்தை திறக்க முயன்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உட்பட 200 பேர் கைது சாலிகிராமத்தில் பரபரப்பு

பூந்தமல்லி, அக்டோபர், 30-10-2014,
சாலிகிராமத்தில் உரிய அனுமதியின்றி பள்ளி கட்டிடத்தை திறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய கட்டிடம்
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வைச் சேர்ந்த பார்த்தசாரதி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 15 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
அனுமதி மறுப்பு
கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த பள்ளியின் கட்டிட திறப்பு விழா நேற்று காலை நடைபெற
                                                                                                   மேலும், . . . . 

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர் கருணாநிதி அறிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை, அக்டோபர், 30-10-2014,
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு, தக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கருணாநிதியின் அறிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர்கள் ஆறுதல் தெரிவித்தனர்
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில், அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளை பார்வையிடவில்லை என்று கூறி இருக்கிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர். அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
                                                                                                   மேலும், . . . .  .

Tuesday 28 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய விவகாரம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ‘அனைத்து பெயர்களையும் இன்று தாக்கல் செய்ய வேண்டும்’


கருப்பு பணம் பதுக்கியது தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அனைவரது பெயர்களையும் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி, அக்டோபர், 29-10-2014,
கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை இந்தியர்கள் பலரும் சுவிஸ் வங்கிகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி உள்ளனர்.
ராம் ஜெத்மலானி வழக்கு
இந்த கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதையடுத்து கருப்பு பணத்தை மீட்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
                                                                                                                      மேலும், . . . . 

தமிழகத்தில் பரவலாக மழை: கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் 6 இடங்களில் நிலச்சரிவு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை




சென்னை, அக்டோபர், 29-10-2014,
கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் 6 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீண்டும் நிலச்சரிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் மழை காரணமாக ஏற்கனவே 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் பலத்த மழை பெய்ததால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. மீண்டும் மலைப்பாதையில் அனாதிமுடுக்கு உள்பட புதிதாக 6 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ராட்சத பாறைகள், மரங்கள் அடித்துவரப்பட்டு சாலையே தெரியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து கொடைக்கானல் மலைப்பாதையில் மொத்தம் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 பணியாளர்கள் இவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இனி மழை பெய்யாமல் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இவற்றை சீரமைக்க முடியும், மழை தொடர்ந்தால் இன்னும் தாமதமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                            மேலும், . . . 

சட்டவிரோத கல், மணல், கிரானைட் குவாரிகள் பற்றி விசாரணை சகாயம் நியமனத்தை எதிர்த்து மறுஆய்வு மனு தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, அக்டோபர், 29-10-2014,
சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சட்டவிரோத குவாரிகள்
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் பல சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு சுமார் ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
                                                                                                           மேலும், . . . . 

அரியானாவில் சினிமாவை மிஞ்சிய சம்பவம் சுரங்கப்பாதை தோண்டி வங்கியில் கொள்ளையடித்த பலே ஆசாமிகள் கோடிக்கணக்கான நகை, பணத்தை அள்ளிச்சென்றனர்



சண்டிகார், அக்டோபர், 29-10-2014,
அரியானாவில் சுரங்கப்பாதை தோண்டி வங்கியில் இருந்த கோடிக்கணக்கான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டத்துக்கு உட்பட்ட கோகனா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஒன்று அமைந்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வங்கியில் 35 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் ரூ.125 கோடி அளவுக்கு பணம் உள்ளது.
                                                                                                 மேலும், . . . 

Monday 27 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
புதுடெல்லி, அக்டோபர், 28-10-2014,
சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வக்கீலான ராம்ஜெத் மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது.
                                                                                                            மேலும், . . . . 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அணைகள் நிரம்பியதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சென்னை, அக்டோபர், 28-10-2014,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
7 பெண்கள் காயம்
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்ட அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேசமயம் பயிர்கள் நாசம், மண் சரிவு, பாலங்கள், வீடுகள் சேதம் என ஆங்காங்கே பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று 2 வீடுகளில் மண் சுவர்கள் இடிந்துவிழுந்ததில் 7 பெண்கள் காயம் அடைந்தனர்.
                                                                                                 மேலும், . . . . 

சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது பரபரப்பு தகவல்கள்



சென்னை, அக்டோபர், 28-10-2014,
சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
காரில் சென்ற போதுமடக்கினார்கள்...
கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் நேற்று காலை 9.30 மணி அளவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் உத்தரவிட்டார். உடனே கோயம்பேடு உதவி போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், சக்திவேல் ஆகியோர் களத்தில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்தபடி இருந்தனர்.
அப்போது வேகமாக கார் ஒன்று விதிமுறைக்கு மாறாக, மற்ற வாகனங்களை முந்தி சென்றது. அந்த காரை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மடக்கினார்.
                                                                                                               மேலும், . . .  .

எத்தியோப்பியாவில் பாய்லர் வெடித்து பலியான 5 தமிழர்களின் உடல்கள் விமானம் மூலம் சென்னை வந்தன உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

ஆலந்தூர், அக்டோபர், 28-10-2014,
எத்தியோப்பியாவில் பாய்லர் வெடித்து பலியான 5 தமிழர்களின் உடல்கள் விமானம் மூலம் சென்னை வந்தது. அவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
5 பேர் பலி
எத்தியோப்பியாவில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையை மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், திருவாரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சர்க்கரை ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முருகானந்தம்(வயது 25), முத்துகிருஷ்ணன்(42), மயிலாடுதுறையை சேர்ந்த வேல்ராஜ்(29), திருவாரூரை சேர்ந்த தேவராஜ்(40), கடலூரை சேர்ந்த தேவேந்திரன்(34) ஆகியோர் பலியாகிவிட்டனர்.
                                                                                                மேலும், . . . . 

Sunday 26 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வலியுறுத்தல்


ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி, அக்டோபர், 27-10-2014,
பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணிஅரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது.
எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து
மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைந்து 5 மாதங்கள் முடிவு அடைந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்து வழங்க முடிவு செய்தார்.
இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் எண்.7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் செய்யப்பட்டன.
                                                                                                      மேலும், . . . . 

குறைந்த கட்டணம் ரூ.8, அதிகபட்ச கட்டணம் ரூ.23 பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது


சென்னை, அக்டோபர், 27-10-2014,
சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் சேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார்.
                                                                                            மேலும், . . . . 

பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் சென்னையில் நாளை நடக்கிறது


சென்னை, அக்டோபர், 27-10-2014,
பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால் விலை உயர்வு
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில், மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் ஒரு லிட்டர் பாலுக்கு ஒரேயடியாக 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை, எந்த அரசும் பால் விலையை இந்த அளவுக்கு உயர்த்தவில்லை.
கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதள பாதாளத்திற்கு சென்று விட்டதால்தான் தற்போது விலை உயர்த்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
                                                                                                       மேலும், . . . . 

ராஜபாளையம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்


ராஜபாளையம், அக்டோபர், 27-10-2014,
மழை காரணமாக ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பருவமழை தீவிரம்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்து பல்வேறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அடிவார பகுதியில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளத்தில்200 பேர் சிக்கினர்
அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
                                                                                                              மேலும், . . . 

Saturday 25 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

வேலூரில் பயங்கரம் சிறுவனை கொலை செய்து பீரோவுக்குள் வைத்து பூட்டிய பெண் கைது கள்ளக்காதலை கண்டித்ததால் வெறிச்செயல்




வேலூர், அக்டோபர், 26-10-2014,
கள்ளக்காதலை கண்டித்தவரின் மகனை கொலை செய்து பீரோவுக்குள் வைத்து பூட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் மாயம்
வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 30). சலவை தொழிலாளி. இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள்.
இதில் 2-வது மகன் தினேஷ் (3) நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் அவனை காணவில்லை.
நீண்ட நேரமாகியும் தினேஷ் வீடு திரும்பாததால் அவனை தந்தை முரளி, பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், முரளியின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.
எதிர்வீட்டு பெண்
அப்போது போலீசாருக்கு ரகசிய போன் வந்தது. அதில் முரளிக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் பெயிண்டர் மனைவி சுமதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக போனில் பேசியவர்கள் கூறினர். அதன் பேரில் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் பெயிண்டர் வீட்டிற்கு சென்றனர். அங்கு பெயிண்டரின் மனைவி சுமதி வீட்டை பூட்டி விட்டு வெளியே அமர்ந்திருந்தார்.
அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால்,
                                                                                                             மேலும், . . .

தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி கர்நாடக-தமிழக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது


மேட்டூர், அக்டோபர், 26-10-2014,
கர்நாடக-தமிழக எல்லையில் காவிரி ஆற்றில் கிடந்த தமிழக மீனவரின் உடல் மைசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதியானது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
துப்பாக்கி சூடு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பழனி(42), மீனவர். கடந்த 21-ந் தேதி பழனி மற்றும் 2 பேர் எல்லை அருகே கர்நாடக மாநிலத்தில் உள்ள அடிப்பாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கர்நாடக வனத்துறையினர் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. அதில் ராஜா என்பவரின் காலில் குண்டுகள் பாய்ந்தன. அவர் கிராமத்திற்கு வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், பழனி அடிப்பாலாறு காவிரி ஆற்றில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
சோதனைசாவடி சூறை
மார்பில் குண்டு காயங்களும், தலையில் வெட்டுக் காயங்களும் இருந்தன. இடது கை வெட்டப்பட்டும், ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்தன.
                                                                                                           மேலும், . . . 

காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நவம்பர் 25 முதல் 5 கட்ட தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி, அக்டோபர், 26-10-2014,
காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நவம்பர் 25-ந் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
காஷ்மீர், ஜார்கண்ட்
உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் (87 இடங்கள்) ஆயுள் ஜனவரி 19-ந் தேதி முடிகிறது.
இதேபோன்று ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிற ஜார்கண்ட் மாநில சட்டசபையின் (81 இடங்கள்) ஆயுள் ஜனவரி 3-ந் தேதி முடிகிறது.
5 கட்ட தேர்தல்
இதையடுத்து இந்த 2 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார்.
                                                                                                                 மேலும், . . . 

பால் கொள்முதல் விலை அதிகரிப்பு எதிரொலி ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை, அக்டோபர், 26-10-2014,
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மனிதனுக்கு தேவைப்படும் உணவுப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படுவதும், கிராமப்புற விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமான பாலை உற்பத்தி செய்வோருக்கு ஆதாய விலை கிடைக்கச் செய்தல் என்ற மக்கள் சேவையினை திறம்பட செய்து கொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம்.
இதை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால் தங்கு தடையின்றி நியாயமான விலையில் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
                                                                                                               மேலும், . . . 

Friday 24 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மேட்டூர் அருகே வனப்பகுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை கர்நாடக அதிகாரிகளை கண்டித்து சோதனை சாவடிக்கு தீவைப்பு



கொளத்தூர், அக்டோபர், 25-10-2014,
மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் மாயமான தமிழக மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் கர்நாடக மாநில சோதனைச்சாவடியை தீவைத்து எரித்தனர்.
துப்பாக்கிச்சூடு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்த தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் சிறு, சிறு தமிழக கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, ராஜா, செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி (42) ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக-கர்நாடக எல்லை அருகே கர்நாடக மாநிலத்தில் உள்ள அடிப்பாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் வேட்டைக்கு சென்ற இவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ராஜாவின் காலில் 10-க்கும் மேற்பட்ட பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன. அவரை கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு முத்துசாமி தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து விட்டார். ராஜா ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
ஆனால், இவர்களுடன் வேட்டைக்கு சென்ற பழனி வீடு திரும்பவில்லை.
                                                                                               மேலும், . . . . 

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மரணம் பெசன்ட்நகர் மயானத்தில் உடல் தகனம்
சென்னை, அக்டோபர், 25-10-2014,
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
எஸ்.எஸ்.ஆர்.
பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ரசிகர்களால் எஸ்.எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்டார். ஆரம்பகால தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் கொடி கட்டி பறந்த காலத்தில் இவரும் புகழ் பெற்ற நடிகராக விளங்கினார்.

வசனங்களை அழகு தமிழில் உச்சரிக்க கூடியவர். கதாநாயகனாக மட்டும் அல்லாமல் சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து நடிப்பு சுடரொளியாக திகழ்ந்தார்.
ஓய்வு
1948-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி 2003-ம் ஆண்டு வரை படங்களில் நடித்தார். இடையில் 1970 முதல் 1981 வரை படங்களில் நடிக்காமல் இருந்தார்.
                                                                                                               மேலும், . . . 

தமிழ்நாட்டில் மழை-வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிக்கு தனி அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு நடவடிக்கை


தமிழ்நாட்டில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை கண்காணிக்கவும், முடுக்கி விடவும் தனி அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.
சென்னை, அக்டோபர், 25-10-2014,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
வெள்ளப்பெருக்கு
குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தஞ்சை, நாகை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏராளமான ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
                                                                                                      மேலும், . . . . 

குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமம் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், மேயர் ஆய்வு உடனடி நிவாரண பணிக்கு நடவடிக்கை

சென்னை, அக்டோபர், 25-10-2014,
சென்னையில் தொடர் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், மேயர் ஆய்வு செய்தனர்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலை, பட்டாளம் ஸ்ட்ரான்ஸ் சாலை, கெல்லீஸ் சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, மாதவரம் சாலை, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, தரமணி சர்வீஸ் சாலை உள்பட பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.
வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தை சுற்றிலும் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது.
                                                                                                    மேலும், . . . .