Saturday 28 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2015) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

முன்னேற்றம் தரும் பட்ஜெட் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, பிப்ரவரி, 28–02-2015
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்து உள்ளார். ‘‘இது நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்.
நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புத்திசாலித்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மத்திய பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை: சோனியா கருத்து
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:–
இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை.
2020–ம் ஆண்டுக்குள் 6 கோடி வீடுகள் கட்டப்படும்
பாராளுமன்றத்தில் இன்று 2015 – 16–ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி தாக்கல் செய்தார்.
பா.ஜ.க. அரசின் முதல் முழுமையான இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:–
                                                                                                              மேலும், . . . . .

அம்பத்தூரில் 5 பெண்கள் உள்பட  6  பேர் மாயம் போலீசார் விசாரணை

சென்னை, பிப்ரவரி, 28–02-2015
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சிந்துபாரதி (19).
இவர் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி தையல் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்க குன்றத்தூர் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
அம்பத்தூர் பானுநகர் 27–வது அவென்யூவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பிரியதர்சினி (19).
                                                                                                           மேலும், . . . . .

பணம்–ஆடம்பர ஆசை காட்டி குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி கைது

பொள்ளாச்சி, பிப்ரவரி, 28–02-2015
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி ஏர்பதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 42). இவரது மனைவி கதிக பீவி (47). இவர்கள் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் சி.டி.கடை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டால் பணம் மற்றும் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறினர். சில பெண்கள் இதற்கு மறுத்து ஒதுங்கினர்.
ஆனால் வறுமை மற்றும் ஆடம்பர ஆசையால் சில குடும்ப பெண்கள் ஜாகீர் உசேன்–கதிக பீவி வீசிய வலையில் விழுந்தனர்.
                                                                                                            மேலும், . . . .

மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை கருணாநிதி பரபரப்பு பேச்சு

சென்னை, பிப்ரவரி, 28–02-2015
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:–
ஆண்டுதோறும் இங்கே ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
                                                                                             மேலும், . . . . . .

Wednesday 25 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஊழல் புகாரின் பேரில் போலீசார் வழக்கு அரசின் கட்டளையை ஏற்று மத்திய பிரதேச கவர்னர் ராஜினாமா

ஊழல் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால், மத்திய அரசின் கட்டளையை ஏற்று மத்திய பிரதேச மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2015,
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி ராம் நரேஷ் யாதவ்.
இவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2011-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிகாலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ளது.
ராஜினாமா
இந்த நிலையில் அவர் மீது பணியாளர் தேர்வு வாரிய ஊழல் தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
                                                                                                     மேலும் , . . . .

நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை பஸ்கள் உடைப்பு; ஆட்டோ எரிப்பு போலீஸ் தடியடியால் பதற்றம்


நெல்லை, பிப்ரவரி, 26-02-2015,
நெல்லையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. ஆட்டோ எரிக்கப்பட்டது.
ஆட்டோ டிரைவர்
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர், பொன்னையா (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று காலை தச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டார். பின்னர் வண்ணார்பேட்டை மேம்பால ரவுண்டானாவை கடந்து வடக்கு பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. அந்த கும்பலில் சிலர் கைகளில் வைத்திருந்த அரிவாள்களால் பொன்னையாவை வெட்ட முயற்சி செய்தனர்.
படுகொலை
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னையா ஆட்டோவை விட்டு கீழே இறங்கி உயிர் பிழைப்பதற்காக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.
பொன்னையாவுக்கு கழுத்து மற்றும் கையில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பொன்னையா ஓட்டி வந்த ஆட்டோவை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே கவிழ்த்து போட்டுவிட்டு, தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி விட்டார்கள்.
                                                                                                     மேலும், . . . . .

1-ந் தேதி முதல் அமல் டெல்லியில் மின்கட்டணம் பாதியாக குறைப்பு மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை

புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2015,
டெல்லியில் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை செய்யப்படும். இது 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
தேர்தல் வாக்குறுதி
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் இப்போது அந்த கட்சி நிறைவேற்றி உள்ளது.
மந்திரிசபை முடிவு
இதற்கான முடிவு, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்த மாநில மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன்படி மாதம் ஒன்றுக்கு 400 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துகிறவர்களுக்கு தற்போது வசூலிக்கப்படுகிற மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படுகிறது. இது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன் பலனை டெல்லியில் வசிக்கிற 90 சதவீதம் மக்கள் அடைவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
                                                                                    மேலும், . . . .

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு ஆவணங்கள் எங்கே? கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி மீண்டும் சரமாரி கேள்வி அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பதில் சொல்லாமல் மவுனம்

பெங்களூரு, பிப்ரவரி, 26-02-2015,
ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு ஆவணங்கள் எங்கே? என்று கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி மீண்டும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.
பவானிசிங் வாதம்
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர்கள் ஜெயலலிதா உள்பட 4 பேர்கள் மற்றும் நிறுவனங்களின் வக்கீல்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து அரசு தரப்பு வாதம் நேற்று முன்தினம் தொடங்கியது.
அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனது இறுதி வாதத்தை நடத்தி வருகிறார். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் நேற்று தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதிடுகையில், ‘‘ஜெயலலிதா அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராகவும், எம்.பி.யாகவும், முதல்- அமைச்சராகவும் பதவி வகித்தார். சசிகலாவின் கணவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுதாகரன் சென்னைக்கு படிக்க வந்தபோது ஜெயலலிதா வீட்டில் தங்கினார். இளவரசியின் கணவரும் உணவு துறையில் பணியாற்றினார். அவர் மரணம் அடைந்துவிட்டார். ஜெயலலிதா வீட்டில் 4 பேரும் தங்கி இருந்தனர். ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேருக்கு வருமானம் எதுவும் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்து தான் மற்ற 3 பேருக்கும் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றது’’ என்றார்.
ஆவணங்கள் எங்கே?
அப்போது நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற 3 பேருக்கு பண பரிமாற்றம் நடைபெற்றதாக நீங்கள் சொல்கிறீர்கள். அதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா? 3 பேரும் ஜெயலலிதாவின் பினாமிகள் என்று சொல்கிறீர்கள். ரத்த உறவு இருப்பவர்கள் மட்டுமே பினாமிகளாக இருக்க முடியும். அவ்வாறு இருக்க இவர்களை எப்படி ஜெயலலிதாவின் பினாமிகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’’ என்று கேள்விகளை கேட்டார்.
நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு வக்கீல் பதில் சொல்லாமல் மவுனமாக நின்று இருந்தார்.
                                                                                                மேலும், . . . . 

Tuesday 24 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அன்னா ஹசாரே போராட்டம் தொடங்கினார் மத்திய அரசு மீது கடும் தாக்கு

புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2015,
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று தொடங்கிய அன்னா ஹசாரே, மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
அன்னா ஹசாரே தர்ணா
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக பிரபல காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான 77 வயது அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அவர் தனது போராட்டத்தை தொடங்கினார்.
இதில் அன்னா ஹசாரேயுடன் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்களும் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். நர்மதா நதி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மேதா பட்கரும் போராட்டத்தில் பங்கு கொண்டார். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசும் வந்திருந்தார்.
மத்திய அரசு மீது தாக்கு
போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசுகையில் மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
                                                                                                         மேலும், . . . .

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது மேலும் 35 திட்டங்களுக்கு நேரடி மானியம் வழங்கப்படும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை


பாராளுமன்றத்தில் நேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மேலும் 35 திட்டங்களுக்கான மானியம் நேரடியாக வழங்கப்படும் என்றும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.
புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2015,
3 மாத காலம் நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
ஜனாதிபதிக்கு வரவேற்பு
நேற்றைய முதல் நாள் கூட்டம் இரு சபைகளின் கூட்டு கூட்டமாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
இதற்காக அவர்பாரம்பரிய முறைப்படி குதிரைப் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். பாராளுமன்ற வாசலில் அவரை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
உரை நிகழ்த்தினார்
அதன் பிறகு இரு சபைகளின் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
                                                                                                          மேலும், . . . .. 

தேர்தல்களில் காங்கிரசுக்கு தொடர் தோல்வி ராகுல் காந்தி, அரசியலில் இருந்து சில வாரங்களுக்கு திடீர் ‘ விடுமுறை’

புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2015,
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளை தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத்தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு விடுமுறை எடுத்து உள்ளார்.
தேர்தல்களில் தோல்வி
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்திய சுதந்திரத்துக்குப்பின் நடந்த தேர்தல்களில் அந்த கட்சி பெற்ற மிகப்பெரிய தோல்வி இதுவாகும். மேலும் தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது.
இந்த தோல்வி சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் நீடித்தது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி, தற்போதைய தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்கால திட்டங்கள்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு உள்ளிட்ட முக்கியமான அமர்வுகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெறும்
                                                                                                           மேலும், . . . .

செத்த பாம்பை அடிக்க வேண்டாம்: மீத்தேன் சோதனை உரிமம் காலாவதி ஆகிவிட்டது; அச்சப்படத் தேவை இல்லை சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


சென்னை, பிப்ரவரி, 24-02-2015,
மீத்தேன் சோதனை உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்தத் திட்டம் பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஒப்புதல் வழங்கிய தி.மு.க. அமைச்சர்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் புரிந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு திட்டம் பற்றிய சில எம்.எல்.ஏ.க்கள் கவலைகளை தெரிவித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய தி.மு.க.வும், அதன் உறுப்பினர்.ஐ.பெரியசாமியும் இது பற்றி பேசியது தான்.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியினை, ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு 2010-ம் ஆண்டு, ஏலத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான அந்த நிறுவனத்துக்கு பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அங்கு ஆய்வு மற்றும் உற்பத்தியைத் தொடங்க ஏதுவாக, பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை தி.மு.க. அரசு 1.1.11 அன்று வழங்கி, அந்த நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தி.மு.க. அரசு ஏற்படுத்திக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில், இந்தத் திட்டத்திற்குத் தேவையான உரிமங்களை, பல்வேறு துறைகளிலிருந்து பெறுவதற்கும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும், குழாய்கள் பதிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும், உரிய உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அனுமதி அளித்திருந்தாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, ஆய்வுப் பணிகளை தொடங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும்.
ஜெயலலிதா விதித்த தடை
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரியதற்கான அனுமதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு
                                                                                                              மேலும், . . . .

Monday 23 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சென்னை திரிசூலம் கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய டிப்பர் லாரி, கிளீனர் உடலை மீட்பதில் சிக்கல் லாரியின் பின்பக்க டயர்கள் மட்டும் மீட்கப்பட்டன

தாம்பரம், பிப்ரவரி, 23-02-2015,
சென்னையை அடுத்த திரிசூலத்தில் உள்ள கல்குவாரி 300 அடி பள்ளத்தில் கிளீனருடன் நீரில் மூழ்கிய லாரி மற்றும் கிளீனர் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. லாரியின் பின்பக்க டயர்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன.
300 அடி பள்ளத்தில் விழுந்தது
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த பகுதியில் 100-க்கும் அதிகமான கிரஷர்களும் உள்ளன. இங்குள்ள 1-ம் நம்பர் கல்குவாரியின் மேல் பகுதியில் தனியார் கிரஷர் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை ஜல்லி ஏற்ற வந்த லாரியை டிரைவர் ராமு என்பவர் ஓட்டி வந்தார்.
லாரியில் கிளீனராக கலைவாணன்(வயது 25) என்பவர் இருந்தார். லாரியை கிரஷரில் விட்டு விட்டு ராமு சாப்பிட சென்று விட்டதாக தெரிகிறது. ஜல்லி ஏற்ற வசதியாக லாரியை விடுவதற்காக கலைவாணன் லாரியை முன்னோக்கி எடுத்தார். அப்போது ‘பிரேக்’ பிடிக்காததால் டிப்பர் லாரி, கல்குவாரி உச்சியில் இருந்து 300 அடி பள்ளத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கியது. டிப்பர் லாரியுடன் கிளீனர் கலைவாணன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கிரேன் கொண்டுவரவில்லை
இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சூரியபிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் டியூப் கட்டி, லாரி விழுந்த இடத்தில் பாதாள கொலுசை கயிறு மூலம் கட்டி ஆய்வு செய்தனர். அப்போது 50 அடி ஆழத்தில் லாரி சிக்கிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
300 அடி பள்ளத்தில் கிரேனை கொண்டு வந்து இறக்குவது சிரமம் என்பதால் கல்குவாரியின் உச்சியில் லாரி கவிழ்ந்த பகுதியில் ராட்சத கிரேன் கொண்டு வந்து அதன் மூலம் ரோப் கயிறு இறக்கி லாரியை தூக்க முடிவு செய்யப்பட்டது.
கிரேன் உரிமையாளர்கள் விபத்து நடந்த இடத்தை வந்து பார்த்து விட்டு கிரேன் கொண்டு வருவதாக கூறிச்சென்றனர்.
                                                                                                                       மேலும், . . . . .

நாமக்கல் அருகே: தாய், மனைவி உள்பட 3 பேரை கொலை செய்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல், பிப்ரவரி, 23-02-2015,
நாமக்கல் அருகே தாய், மனைவி, சகோதரர் என 3 பேரை படுகொலை செய்த விவசாயி, அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாய குடும்பம்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் மூலக்காடு பகுதியை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் என்பவரது மனைவி செட்டியம்மாள் (வயது 75). நஞ்சப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செட்டியம்மாள் தனது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேல் (48) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் 6½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்தும், கறவை மாடுகளை வளர்த்தும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களில் காளியண்ணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மனைவி-மகன் தற்கொலை
பழனிவேலுக்கு செல்வம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
                                                                                             மேலும், . . . . . .

கணவரை கொன்ற ரவுடியை கூலிப்படையை ஏவி பழி தீர்த்தார் சென்னை ரவுடி கொலையில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பற்றி பரபரப்பு தகவல்

சென்னை, பிப்ரவரி, 23-02-2015,
சென்னை எழும்பூரில் ரவுடியை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மனைவி கைது செய்யப்பட்டார். கணவரை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரவுடி கொலை
சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் என்ற டி.வி.செந்தில்(வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்ற இவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
கடந்த 9-ந் தேதி அன்று இரவு இவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் எதிரில் உள்ள பொன்னியம்மன் கோவில் சாலை சந்திப்பில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் செந்திலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் தப்பி ஓடி விட்டனர்.
கூலிப்படை கும்பல் கைது
இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் மதிஅரசு தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கூலிப்படை தலைவன் ஜான்சன்(வயது 26), அவரது கூட்டாளிகள் பாபு(25), ரமேஷ்(27), சதீஷ்(27), சரத்குமார்(27), அருண்குமார்(26), சந்துரு(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். ஜான்சன் செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்தவர். மாதவரத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் ஆட்டோ டிரைவர் முருகன் என்பரை கொலை செய்த வழக்கிலும், மதுரவாயலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளை அடித்த வழக்கிலும் ஜான்சன் சிறைக்கு போனவர். கைதான சந்துரு, திருவான்மியூரில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைக்கு போனவர்.
கைதான மற்றவர்கள் அனைவரும் சாதாரண கூலித்தொழிலாளிகள், கொலை தொழிலுக்கு புதியவர்கள்.
                                                                                                               மேலும், . . .

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை இன்று சொந்த ஊர் திரும்புகிறார்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்.
புதுடெல்லி, பிப்ரவரி, 23-02-2015,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47).
ஆப்கானிஸ்தான் சென்றார்
இவர் ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வந்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று, அங்கு ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார்.
                                                                                                          மேலும், . . . . . 

Saturday 21 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை திடுக்கிடும் தகவல் அம்பலம்

மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, பிப்ரவரி, 22-02-2015,
மத்திய அரசின் பெட்ரோலிய துறை அமைச்சக ஆவண திருட்டு ஊழல் விவகாரம், விசுவரூபம் எடுக்கிறது.
ஆவண திருட்டு ஊழல்
டெல்லி பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், இறக்குமதி தொடர்பான முக்கிய கொள்கை ஆவணங்கள் களவாடப்பட்டு, பிரபல நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஊழல், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊழலில் முதலில் கடந்த 19-ந் தேதி பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ்நிலை ஊழியர்கள் 2 பேர், இடைத்தரகர்கள் 3 பேர் என 5 பேர் சிக்கினர். அஷாராம், ஈஸ்வர் சிங், லால்தா பிரசாத், ராகேஷ் குமார், ராஜ்குமார் சவுபே ஆகிய அந்த 5 பேரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் எரிசக்தி ஆலோசகர்களான முன்னாள் பத்திரிகையாளர் பிரவாஸ் ஜெயின், சாந்தனு சைக்கியா ஆகிய2 பேரை கைது செய்தனர்.
பட்ஜெட் ஆவணங்கள்
7 பேரும் டெல்லி பாட்டியாலா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
                                                                                                               மேலும், . . . . .

சபாநாயகர் மீது தாக்குதல்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீசு

சென்னை, பிப்ரவரி, 22-02-2015,
சட்டசபையில் சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, அதற்கு விளக்கம் கேட்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீசு அனுப்பியுள்ளது.
தள்ளுமுள்ளு
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 19-ந் தேதி நடந்த விவாதத்தின் போது தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மோகன் ராஜ், முன்னாள் முதல்-அமைச்சர் பற்றி கூறிய வார்த்தைக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு,
                                                                                                                           மேலும்,.. . . 

சென்னை திரிசூலம் கல்குவாரி 300 அடி பள்ளத்தில் கிளீனருடன் நீரில் மூழ்கிய டிப்பர் லாரி கிரேன் மூலம் மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை


தாம்பரம், பிப்ரவரி, 22-02-2015,
திரிசூலத்தில் உள்ள கல்குவாரியில் டிப்பர் லாரி ஒன்று கிளீனருடன் 300 அடி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கியது. லாரியை கிரேன் மூலம் மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கல்குவாரிகள்
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த பகுதியில் கல்குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டதால் குவாரிகள் இயங்கவில்லை. இந்த பகுதியில் 100-க்கும் அதிகமான கிரஷர்கள் உள்ளன.
நல்லம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த கிரஷர்களுக்கு லாரிகள் மூலம் கருங்கற்கள் கொண்டுவரப்படும். அவற்றை இங்கு ஜல்லிகளாக தயார் செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன.
                                                                                                                        மேலும், . . . . .

நான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

ஆலந்தூர், பிப்ரவரி, 22-02-2015,
நான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷியம், பிராங்கிளின்பிரகாஷ், நாஞ்சில்பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரிய நபர்கள் இல்லை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சி பொருளாளர் மோதிலால்வோரா ஆகியோரை சந்தித்து பேசினேன். அப்போது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி பேசினோம். அதுபற்றி உங்களிடம் சொல்வதற்கு இல்லை. கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை.
ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நான் பதில் சொல்ல போவது இல்லை.
                                                                                                       மேலும், . . . . .

Friday 20 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மத்திய அரசின் ரகசியங்களை திருடி விற்றதில் பரபரப்பு பட்ஜெட் ஆவணங்களும் திருட்டு கைதான 7 பேரிடம் விசாரணை

ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில், மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்களும் திருடப்பட்டதாக தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக, கைதான 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி, பிப்ரவரி, 21-02-2015,
டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான சாஸ்திரி பவனில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஆவணங்கள் திருட்டு
அந்த அமைச்சகத்தின் அலுவலகத்தில் தனிச்செயலாளர் ராஜீவ் குமார், இணைச்செயலாளர்கள் சந்தீப் பவுண்ட்ரிக், யு.பி.சிங், இயக்குனர்கள் நளின்குமார், ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டவர்களின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், வரி விதிப்பு, இறக்குமதி உள்ளிட்டவை தொடர்பான ரகசிய ஆவணங்களை திருடி, நகல் எடுத்து, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
                                                                                                               மேலும், . . . .

சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் வெளிநடப்பு


சென்னை, பிப்ரவரி, 21-02-2015,
சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.
தமிழக சட்டசபை கேள்வி- பதில் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதில் திருநெல்வேலியில் அரசு இசைக் கல்லூரி தொடங்கப்படுமா என்று தே.மு.தி.க, (அதிருப்தி) உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் கேள்வி கேட்டிருந்தார்.
அவர் அவையில் நேற்று இல்லாததால், அவருக்கு பதிலாக மற்றொரு தே.மு.தி.க. (அதிருப்தி) உறுப்பினர் தமிழழகன், இதுகுறித்து பேசும் போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலன் கருதி செய்த செயல்களை பட்டியலிட்டு புகழ்ந்து பேசினார். இடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி பேசும் போது, காவிரியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்ற பொருள்படும் படியாக ஒரு சில வார்த்தைகளை பேசினார்.
தி.மு.க. வெளிநடப்பு
இவ்வாறு அவையில் பேசுவதற்கு அனுமதி தரகூடாது என்று சபாநாயகரிடம்,தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
                                                                                                        மேலும், . . . . .

என்ஜினீயரிங் மாணவர் படுகொலை மக்கள் திடீர் வன்முறை, போலீஸ் தடியடி

வள்ளியூர், பிப்ரவரி, 21-02-2015,
வள்ளியூரில் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து மக்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
என்ஜினீயரிங் மாணவர்
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள நம்பியான்விளையைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. ஆட்டோ டிரைவரான இவருடைய மகன் டேவிட்ராஜா (வயது 20) அந்த பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை 9 மணி அளவில் அவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வள்ளியூர்-ராதாபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்து நின்ற ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டியது.
                                                                                                              மேலும், . . . .

பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் நாளை பதவி ஏற்கிறார் ஓட்டெடுப்புக்கு முன், மஞ்சி திடீர் ராஜினாமா

பாட்னா, பிப்ரவரி, 21-02-2015,
நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் மஞ்சி நேற்று திடீரென்று பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, கவர்னரின் அழைப்பை ஏற்று நிதிஷ்குமார் நாளை புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
நிதிஷ்குமார் தேர்வு
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு ஆதரவு அளித்த 7 மந்திரிகளும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர்.
                                                                                                            மேலும், . . . .

Wednesday 18 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டீசல் விலை குறைவு காரணமாக தமிழகத்தில் பஸ் கட்டணம் குறையுமா? சட்டசபையில் முதல்-அமைச்சர் பதில்

டீசல் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணம் குறைக்கப்படுமா என்பதற்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
சென்னை, பிப்ரவரி, 19-02-2015,
சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று தே.மு.தி.க. உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் (மேட்டூர் தொகுதி) பேசும்போது, ‘‘தற்போது டீசல் கட்டணம் குறைந்துள்ளதால், பஸ் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும்’’ என்றார்.
மேலும் ‘‘120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுக்க வேண்டும்’’ என்றார்.
பன்னீர் செல்வம் பதில்
அதற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:-
2011-ம் ஆண்டு பஸ் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டபோது, டீசல் விலை என்ன இருந்தது,
                                                                                                         மேலும், . . . . .

சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து வாக்குவாதம்: தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் உறுப்பினர் அன்பழகனை கோமாளி என்றதால் கூச்சல் - குழப்பம்

சென்னை, பிப்ரவரி, 19-02-2015,
சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் அவர்கள் உள்ளே வந்த நிலையில், தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என்று கூறியதால், சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் பேச முயற்சி
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் காலை 11.37 மணிக்கு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘‘மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் சிலர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தொடர்ந்து பேச முற்பட்டார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
தி.மு.க. வெளிநடப்பு
சபாநாயகர் ப.தனபால்:- இது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம். அதுகுறித்து பேசுங்கள்.
அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன்:- கவர்னர் உரை மீதான விவாதம் நடக்கும் நாளில் ‘ஜூரோ ஹவர்’ (நேரமில்லா நேரம்) கிடையாது என்பது உங்களுக்கே தெரியும். பட்ஜெட் மீதான விவாதத்தில் நீங்கள் இதுகுறித்து பேசலாம்.
(அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து பேச முயன்றனர்)
சபாநாயகர்:- இதுகுறித்து பொதுவிவாதம் நடக்கும் போது பேசுங்கள். பதில் கிடைக்கும்.
                                                                                                    மேலும், . . . . .

பந்தலூர் அருகே பெண்ணை கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது

பந்தலூர், பிப்ரவரி, 19-02-2015,
பந்தலூர் அருகே பெண்ணை கடித்து கொன்ற புலி அதிரடிப்படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டது.
பெண்ணை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே சோலைக்கடவு பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் கடந்த 14-ந் தேதி மகாலட்சுமி (வயது 32) என்பவர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்த புலி ஒன்று அவர் மீது பாய்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தை கடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மகாலட்சுமி பலியானார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். இது பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகாலட்சுமி உடலை பிதிர்காடு பஜாரில் நடுரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 இடங்களில் இரும்பு கூண்டு
இந்த புலியை பிடிப்பதற்காக 5 இடங்களில் இரும்பு கூண்டுகள் பொருத்தப்பட்டன. மேலும் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
                                                                                                         மேலும், . . . . .

சென்னை பூங்காநகர் பறக்கும் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பெட்டி தடம் புரண்டது; பயணிகள் உயிர் தப்பினர் வேளச்சேரி-கடற்கரை இடையே 6½ மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு


சென்னை, பிப்ரவரி, 19-02-2015,
சென்னை பூங்காநகர் பறக்கும் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் வேளச்சேரி-கடற்கரை இடையே 6½ மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
பூங்காநகர் ரெயில் நிலையம்
சென்னை வேளச்சேரி-கடற்கரை இடையே இருமார்க்கமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில்(வண்டி எண்:41038) காலை 10.45 மணிக்கு பூங்காநகர் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்தது.
மின்சார ரெயிலை பார்த்ததும் பயணிகள் ரெயிலில் ஏற ஆயத்தமாகி கொண்டிருந்தனர். பூங்காநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்துவதற்காக 6 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகளும் நடைமேடையில் இறங்குவதற்காக காத்திருந்தனர்.
தடம் புரண்டது
அப்போது திடீரென மின்சார ரெயிலின் 3-வது பெட்டி திடீரென தடம்புரண்டது. ரெயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கிய வேகத்தில் ரெயில் பெட்டியானது நடைமேடையில் பலத்த சத்தத்துடன் மோதியது.
இதனால் நடைமேடையில் இறங்க காத்திருந்தவர்கள் அலறினர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
                                                                                                     மேலும், . . . . .

Tuesday 17 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (18-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (18-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி

இந்தியாவில் மத சுதந்திரம் முழுமையாக நீடிக்கும் மத வெறுப்பை அனுமதிக்க முடியாது பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடெல்லி, பிப்ரவரி, 18-02-2015,
மத வெறுப்புணர்வை யார் தூண்டினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி சம்பவம்
தலைநகர் டெல்லியில், அண்மையில் கிறிஸ்தவ ஆலயம், கிறிஸ்வத பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். எனினும் பிரதமர் மோடி இதுகுறித்து நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
டெல்லி போலீஸ் கமிஷனரை நேரில் அழைத்து இதுபற்றி பேசினார். இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புனிதர் பட்டம்
கேரளாவை சேர்ந்த குரியகோஸ் இலியாஸ் சவாரா, அன்னை யூப்ராசியா ஆகியோருக்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கினார். இதை கொண்டாடுவதற்கான தேசிய விழா டெல்லி விஞ்யான் பவனில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி மத வெறுப்புணர்வை தூண்டிவிடுபவர்கள் குறித்து தனது அரசின் நிலைப்பாடு பற்றி முதல் முறையாக தெளிவாக குறிப்பிட்டார்.
                                                                                                 மேலும், . .. . 

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும் சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும் என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா கூறினார்.
சென்னை, பிப்ரவரி, 18-02-2015,
தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-
“ஸ்மார்ட்” நகரங்கள்
மாநிலத்தின் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, சென்னையின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சென்னை பெருநகர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலைகள் போன்ற நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. தமிழகத்தின் 12 மாநகராட்சிகளை “ஸ்மார்ட் நகரங்கள்” திட்டத்தின் கீழ் சேர்க்கக் கோரியுள்ள தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என நம்புகிறேன்.
புதிய நீர்த்தேக்கம்
மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள, நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் முழுமையாக செயல்பட்டு சென்னையின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வருகின்றன. இவற்றுடன், நெம்மேலி மற்றும் பேரூரில் முறையே நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இரண்டு அலகுகளை அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
                                                                                           மேலும், . . . . .

அரசு துறைகளில் ஊழல்: கவர்னரிடம் பா.ம.க.வினர் நேரில் புகார் மனு

சென்னை, பிப்ரவரி, 18-02-2015,
அரசு துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக கவர்னரிடம் பா.ம.க.வினர் நேரில் புகார் மனு அளித்தனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு, கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கிரானைட் கொள்ளை
* 2011-ம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார்.
கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை காட்டுகிறது.
                                                                                                                     மேலும், . . . . 

திருச்சி அரசு மருத்துவமனையில்ஆக்சிஜன் சிலிண்டர் கசிவால் பீதிஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பிய போதுகுழந்தைகள் உள்பட 6 பேர் காயம்


சென்னை, பிப்ரவரி, 18-02-2015,
திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கசிவால் பீதி ஏற்பட்டு, ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பியபோது குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
அரசு மருத்துவமனை
திருச்சி புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த குழந்தைகளின் அருகில் அவர்களின் பெற்றோர் இருந்து கவனித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வார்டில் எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். காலியாகும் சிலிண்டர்கள் இதன் அருகே அடுக்கி வைக்கப்படும்.
சிலிண்டரில் கசிவு
நேற்று பகல் 11.20 மணி அளவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரை சோதித்து வார்டில் வைப்பதற்காக சிலிண்டரின் மேல் பகுதியை திறந்தார்.
                                                                                                  மேலும், . .  . .
 

Monday 16 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இந்த ஆண்டின் முதல் கூட்டம்: சட்டசபையில், இன்று கவர்னர் உரையாற்றுகிறார்

சென்னை, பிப்ரவரி, 17-02-2015,
தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார்.
முதல் கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் மாநில கவர்னர் உரையாற்றுவார்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (17-ந் தேதி) தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல்நாள் கூட்டத்தில் காலை 11.15 மணிக்கு கவர்னர் கே.ரோசய்யா உரையாற்றுகிறார்.
மரபுப்படி வரவேற்பு
உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் கே.ரோசய்யா இன்று காலையில் சட்டசபைக்கு வருவார். அவரை மரபுப்படி சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் கவர்னர் ரோசய்யாவை அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை நிகழ்த்தத் தொடங்குவார்.
கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடிந்த பிறகு அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அதைத் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகள் முடிக்கப்படும்.
                                                                                                   மேலும், . . . . 

இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் பிரதமர் மோடி-சிறிசேனா முன்னிலையில் கையெழுத்து

புதுடெல்லி, பிப்ரவரி, 17-02-2015,
பிரதமர் மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் இது அவரது முதல் வெளிநாட்டு பயணம் ஆகும். விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
இரவில் சிறிசேனா டெல்லியில் உள்ள மவுரியா ஓட்டலில் தங்கினார். அவருடன் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் வந்து உள்ளது.
நேற்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறிசேனாவுக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறிசேனாவை பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வரவேற்றார். தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தை
அதன்பிறகு சிறிசேனா தனது மனைவியுடன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
                                                                                                       மேலும், . . . . . 

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க. அமோக வெற்றி அ.தி.மு.க-1,51,561; தி.மு.க-55,045 பா.ஜனதா-5,015

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி, தி.மு.க. வேட்பாளரை விட 96 ஆயிரத்து 516 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர்.
திருச்சி, பிப்ரவரி, 17-02-2015,
தமிழக சட்டசபையில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
29 வேட்பாளர்கள் போட்டி
இந்த தேர்தலில் வளர்மதி (அ.தி.மு.க.) ஆனந்த் (தி.மு.க.) சுப்பிரமணியம் (பா.ஜ.க.), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஹேமநாதன் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 81.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அ.தி.மு.க. அமோக வெற்றி
அங்கு நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி முன்னணியில் இருந்தார்.
                                                                                           மேலும் , .  . . .

கொலையுண்டதாக கருதப்பட்டவர் உயிருடன் இருப்பது அம்பலம் புதைக்கப்பட்ட பெண் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு

விருதுநகர், பிப்ரவரி, 17-02-2015,
விருதுநகரில் கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனது தாத்தாவுடன் உயிர் வாழ்ந்து வருவது அம்பலமானது.
எனவே புதைக்கப்பட்ட பெண் உடலை தோண்டி எடுத்து மறுவிசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
பெண் கொலை வழக்கு
விருதுநகர் மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 33). கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது ரெங்கராஜன், தனது காதல் மனைவி கோமதியை அடித்துக் கொலை செய்து சாக்குமூடையில் கட்டி வைத்து இருப்பதாக தெரிவித்தார்.
இதன்பேரில் அவரையும் அவரது நண்பர் ஆறுமுகம் (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலையுண்ட பெண்உயிருடன் இருப்பது அம்பலம்
இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என புகார் கூறப்பட்டது.
                                                                                                  மேலும் , . .  . .

Sunday 15 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை மதியம் 1 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்

திருச்சி, பிப்ரவரி, 16-02-2015,
ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று(திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரில், 2 லட்சத்து 21 ஆயிரத்து 172 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர்.
                                                                                          மேலும்,. . . .  

இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் இலங்கை அதிபர் சிறிசேனா டெல்லி வந்தார் பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி, பிப்ரவரி, 16-02-2015,
4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று டெல்லி வந்தார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை, அகதிகள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சிறிசேனா வருகை
இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேயை வீழ்த்தி மைத்ரிபாலா சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார்.
ராஜபக்சே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். ஆனால் சிறிசேனா அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.
சிறிசேனா அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த, பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
                                                                                                              மேலும், . . . .

புலி கடித்து பெண் பலியானதை கண்டித்து வன்முறை அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு அதிகாரிகள், போலீசார் மீது தாக்குதல்

பந்தலூர், பிப்ரவரி, 16-02-2015,
கூடலூர் அருகே புலி கடித்து பெண் பலியானதை கண்டித்து பயங்கர வன்முறை வெடித்தது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் மற்றும் மகனுக்கு அரசு வேலையும் வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
வனத்துறை ஊழியர்கள் மீது தாக்குதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் தாலுகா பாட்டவயல் பகுதியில் நேற்று முன்தினம் தேயிலை பறித்து கொண்டிருந்த மகாலட்சுமி (வயது 32) என்ற பெண்ணை புலி கடித்து கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மகாலட்சுமியின் உடலை ரோட்டில் வைத்து மறியல் செய்தனர்.
பின்னர் ஒரு கும்பல் பிதிர்காடு வனச்சரக அலுவலகத்தை அடித்து நொறுக்கியதுடன், வன அலுவலகத்துக்கு சொந்தமான பல வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு பணியில் இருந்த வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினரை உருட்டு கட்டையால் தாக்கியது. இதில் காயமடைந்த வனச்சரகர் சோமசுந்தரம், காப்பாளர் ஜெயக்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண் போலீசார் மீது தாக்குதல்
இந்த வன்முறை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட முக்கட்டி வனச்சரக அலுவலகத்துக்கு சென்ற ஒரு கும்பல்,
                                                                                      மேலும், . . . .

2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி சேலம் மாநாட்டில் ராமதாஸ் அறிவிப்பு


சேலம், பிப்.16-
2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்படுவதாக சேலத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மாநில மாநாடு
பாட்டாளி மக்கள் கட்சியின், ‘2016 ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் மாநாடு’ சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு எருமாபாளையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் தமிழரசு வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள் மு.கார்த்தி, கண்ணையன், பி.என்.குணசேகரன், மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இரா.அருள், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
                                                                                                   மேலும், . . . . 

Saturday 14 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ராம் லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் திரண்டனர் டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார் டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றப்போவதாக சபதம்


புதுடெல்லி, பிப்ரவரி, 15-02-2015,
டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஒரு துணை முதல்-மந்திரியும், 5 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
அப்போது பேசிய கெஜ்ரிவால் இந்தியாவின் ஊழலற்ற முதல் மாநிலமாக டெல்லியை உருவாக்குவோம் என்று சபதம் செய்தார்.
கெஜ்ரிவால் பதவி ஏற்பு
அண்மையில் டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து மாநில துணை நிலை கவர்னர் நஜீப் சுங் கெஜ்ரிவாலை முதல்-மந்திரியாக பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்வதாக கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி அவருடைய பதவி ஏற்பு விழா டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் எளிய முறையில் நடந்தது.
மைதானத்தில் திரண்டு இருந்த 1 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் முன்னிலையில் கெஜ்ரிவால் 2-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது வழக்கமான தனது பாணியில் வெள்ளை நிற தொப்பியும், நீல நிற ஸ்வெட்டரும் அணிந்து அவர் காணப்பட்டார்.
மந்திரிகள்
கெஜ்ரிவாலுக்கு கவர்னர் நஜீப் சுங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கெஜ்ரிவாலை தொடர்ந்து துணை முதல்-மந்திரியாக கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா பதவி ஏற்றுக்கொண்டார்.
சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், அசிம்முகமது கான், சந்தீப்குமார், ஜிதேந்திர சிங் தோமார் ஆகியோர் கேபினட் அந்தஸ்து மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
பதவி ஏற்றுக்கொண்ட பின்பு பொதுமக்கள் முன்னிலையில் கெஜ்ரிவால் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
                                                                                                             மேலும், . . . .

சென்னையில் மே மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னையில் மே மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை, பிப்ரவரி, 15-02-2015,
சென்னை வர்த்தக மையத்தில் வருகிற மே 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
இதற்கான முன்னேற்பாட்டு நிகழ்ச்சி, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டு வரலாற்றில் இந்த நாள் முக்கிய தினமாக அமைந்துள்ளது.
                                                                                         மேலும், . . . . .

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: சென்னையில், நாய்களுக்கு வினோத திருமணம் இந்து முன்னணியினர் 20 பேர் கைதாகி விடுதலை



சென்னை, பிப்ரவரி, 15-02-2015,
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாய்களுக்கு வினோத திருமணத்தை நடத்திய இந்து முன்னணியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
காதலர் தின எதிர்ப்பு
இந்த நிலையில் காதலர் தினமான நேற்று சென்னை புளியந்தோப்பு, மெயின் ரோட்டில் இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு வினோத திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2 பொமேரியன் நாய்களை கையில் ஏந்தி மேள தாளத்துடன் இந்து முன்னணியினர் அழைத்து வந்தனர். பின்னர் குட்டி தாம்பரன் தெரு முனை சந்திப்பில் நாய்க்குட்டிகளுக்கு மாலை அணிவித்து, பொட்டு வைத்து திருமணம் செய்து வைத்தனர்.
கைது
பின்னர் நாய்க்குட்டிகளை கையில் தூக்கிக்கொண்டு, காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி அந்த தெரு வழியாக சுமார் 20 பேர் ஊர்வலமாக வந்தனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து, அருகில் உள்ள திருமண மகாலில் அடைத்தனர்.
                                                                                                               மேலும், . . . . .

செயல்படுத்தாத திட்டத்துக்காக சுதந்திர போராட்ட தியாகியின் நிலத்தை ஆர்ஜிதம் செய்வதா? திரும்பக் கொடுக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, பிப்ரவரி, 15-02-2015,
சுதந்திர போராட்ட தியாகியின் நிலத்தை ஆர்ஜிதம் செய்யாமல் அதை அவரது வாரிசுதாரர்களுக்கே திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மரங்கள் பயிரீடு
சுதந்திர போராட்ட தியாகி சுப்பையா. சுதந்திரத்துக்காக இவர் பட்ட பாடுகளுக்காக சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் அரசால் 7.83 ஏக்கர் நிலம் 1949-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த இடத்தில் பயிரிட்டு வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு நிலம் கொடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 1973-ம் ஆண்டில் சுப்பையா மரணமடைந்தார். அந்த இடத்தை அவரது வாரிசுகள் பயன்படுத்துகின்றனர். அங்கு வீடு கட்டியும், நெல்லி, அசோகா மரம், புளியமரம், கமலா ஆரஞ்சு மரம் நார்த்தை, மாமரம் போன்றவற்றை பயிரிட்டு வாழ்கின்றனர்.
நோக்கம் நிறைவேறவில்லை
இந்த நிலையில் மறைமலைநகரில் குடியிருப்புப் பகுதி கட்டும் திட்டத்தின் கீழ், அந்த 7.83 ஏக்கர் நிலம் உட்பட 123.49 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து வாரிசுதாரர்கள் அவ்வப்போது வழக்கு தாக்கல் செய்து வந்தனர்.
அரசு அந்த நிலத்தை கையகப்படுத்துவதாக உத்தரவிட்டு இருந்தாலும், அந்த இடத்தை தொடர்ந்து வாரிசுதாரர்களே பயன்படுத்தி வந்தனர்.
                                                                                                         மேலும், . . . .