Saturday 28 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2015) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

முன்னேற்றம் தரும் பட்ஜெட் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, பிப்ரவரி, 28–02-2015
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்து உள்ளார். ‘‘இது நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்.
நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புத்திசாலித்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மத்திய பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை: சோனியா கருத்து
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:–
இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை.
2020–ம் ஆண்டுக்குள் 6 கோடி வீடுகள் கட்டப்படும்
பாராளுமன்றத்தில் இன்று 2015 – 16–ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி தாக்கல் செய்தார்.
பா.ஜ.க. அரசின் முதல் முழுமையான இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:–
                                                                                                              மேலும், . . . . .

அம்பத்தூரில் 5 பெண்கள் உள்பட  6  பேர் மாயம் போலீசார் விசாரணை

சென்னை, பிப்ரவரி, 28–02-2015
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சிந்துபாரதி (19).
இவர் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி தையல் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்க குன்றத்தூர் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
அம்பத்தூர் பானுநகர் 27–வது அவென்யூவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பிரியதர்சினி (19).
                                                                                                           மேலும், . . . . .

பணம்–ஆடம்பர ஆசை காட்டி குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி கைது

பொள்ளாச்சி, பிப்ரவரி, 28–02-2015
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி ஏர்பதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 42). இவரது மனைவி கதிக பீவி (47). இவர்கள் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் சி.டி.கடை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டால் பணம் மற்றும் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறினர். சில பெண்கள் இதற்கு மறுத்து ஒதுங்கினர்.
ஆனால் வறுமை மற்றும் ஆடம்பர ஆசையால் சில குடும்ப பெண்கள் ஜாகீர் உசேன்–கதிக பீவி வீசிய வலையில் விழுந்தனர்.
                                                                                                            மேலும், . . . .

மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை கருணாநிதி பரபரப்பு பேச்சு

சென்னை, பிப்ரவரி, 28–02-2015
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:–
ஆண்டுதோறும் இங்கே ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
                                                                                             மேலும், . . . . . .

No comments:

Post a Comment