Sunday 25 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி இன்று பதவி ஏற்கிறார் 7 நாட்டு தலைவர்கள் பங்கேற்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி, 26-05-2014,

9 கட்டங்களாக நடந்து முடிந்த பாரா ளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

பிரதமராக நரேந்திர மோடி தேர்வு

இந்த வெற்றிக்கு கட்சியை வழிநடத்திய 63 வயதான நரேந்திர மோடி, டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் கடந்த 20-ந் தேதி நடந்த பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்வானி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது ஜனாதிபதி வழக்கத்துக்கு மாறாக பிரதமர், துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமே அமர வழங்குகிற தனது வலதுபுற இருக்கையில், மோடியை அமரச்செய்தார்.

இன்று பதவி ஏற்பு

அப்போது நரேந்திர மோடியை பிரதமராக நியமனம் செய்து அதற்கான அதிகாரபூர்வ உத்தரவை வழங்கினார். 26-ந் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடக்கிறவிழாவில் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி மாளிகை அறிவித்தது.

அதன்படி நரேந்திர மோடி, நாட்டின் 15-வது பிரதமராக இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்.
                                                                                 மேலும், . . . 

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட பஸ் கண்டக்டர் பரிதாப சாவு


நெல்லை, 26-05-2014,

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்பட்ட பஸ் கண்டக்டர் 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

பஸ்சில் தகராறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு கடந்த 20–ந்தேதி மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியை சேர்ந்த தங்கராஜ் மகன் செல்வா (25) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

பஸ், நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பஸ் நிறுத்தத்துக்கு வந்தபோது 3 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள், 3 பேரும் நெல்லைக்கு டிக்கெட் எடுத்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிகளிடம் தகராறு செய்தார்கள். இதனால் தாழையூத்து பஸ் நிறுத்தத்தில் 3 வாலிபர்களையும் பஸ்சில் இருந்து கண்டக்டர் செல்வா இறக்கி விட்டார்.
                                                                                       மேலும், . . . 

ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடியோன் ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர்


சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு ஊட்டும் மாபெரும் வெற்றியை பெற்ற மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் ஜனநாயகப் பெருமையை உலகம் வியக்க உயர்த்தி உன்னதமான புகழ்ச் சிகரங்களை நோக்கி இந்திய நாட்டை வழி நடத்துவார் என்ற திடமான நம்பிக்கையோடு அவரது பதவி ஏற்புக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

வரலாற்றில் சில சம்பவங்கள் விசித்திரமாக திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்ற சொற்றொடர் உலவுகிறது.

இதேபோல ஒரு 26 ஆம் தேதி 1950 ஜனவரி மாதம் மலர்ந்தது. அதுவே இந்தியாவின் குடியரசுத் திருநாள் ஆயிற்று.
                                                                                                    மேலும், . . .  

சாரணர் பயிற்சிக்கு சென்ற தேனி மாணவர் பலி பள்ளி முன்பு உறவினர்கள் 4 மணி நேரம் சாலை மறியல்


தேனி, 26-05-2014,

தேனியில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவர் பலியானதை தொடர்ந்து மாணவர் படித்த பள்ளியை அவருடைய உறவினர்கள் முற்றுகையிட்டு 4மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைதிக் கூட்டம் நடத்தி அதன் பிறகு மாணவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளி மாணவர் பலி

தேனி மாவட்டம், உத்தம பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பாபு. இவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சரண் (வயது 13). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20–ந்தேதி பள்ளியில் இருந்து மாணவர் சரண் உள்பட மொத்தம் 21 மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
                                                                                                                மேலும், . . .

Thursday 22 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மோடி பதவியேற்பு விழா அழைப்பை ஜெயலலிதா ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி சுப்பிரமணிய சுவாமி கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி, 22-05-2014,

புதிய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26 ந்தேதி பதவி ஏற்று கொள்கிறார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள், தூதரக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. குறிப்பாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
                                                                                                                    மேலும், . . .
கிருஷ்ணராயபுரம் அருகே வாலிபர் அடித்து கொலை போலீசார் விசாரணை

கிருஷ்ணராயபுரம், 22-05-2014

கிருஷ்ணராயபுரம் அருகே வாலிபரை அடித்து கொன்று பிணத்தை முள்காட்டில் போட்டுவிட்டு சென்ற கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

முள்காட்டில் வாலிபர் பிணம்

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட மணவாசி சமத்துவபுரம் அருகே உள்ள முள்காட்டிற்கு நேற்று காலை விறகு எடுக்க அந்த பகுதி பெண்கள் சென்று உள்ளனர். அப்போது முள்காட்டில் ஒரு வாலிபர் முகம் மற்றும் தலையில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு திடுக்கிட்ட அவர்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
                                                                           மேலும்,. . . .

2 ஆண்டுகளுக்குப்பின் சடலம் தோண்டியெடுப்பு 

கரூர், 22-05-2014,

அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனியில் தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக மகன் வழக்கு தொடர்ந்ததையடுத்து 2 ஆண்டுகளுக்கு பின் பிரேத பரிசோதனைக்காக உடல் புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள சீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (50). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் "டையிங்' கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
                                                                                          மேலும், . . . 

மகாபலிபுரம் அருகே விபத்து 3 பேர் பலி நடிகர் நாசரின் மகன் படுகாயம்

சென்னை, 22-05-2014,

நடிகர் நாசரின் மகன் பைசல் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் பலியாகினர்.நடிகர் நாசரின் மகன் பைசல் சைவம் படத்தில் பாஷா என்ற பெயரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றும் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
                                                                                                                    மேலும், . . .

Wednesday 21 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-05-2014) மாலை, IST- 05.00 மணி,நிலவரப்படி,


சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை

டமாஸ்கஸ், 21-05-2014,

சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, முற்பிறவியில் தன்னை கொலை செய்த கொலைகாரனை காட்டிக்கொடுத்ததுடன், தன்னை புதைத்த இடத்தையும் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

ட்ருஸ் தனி இனக்குழுவை சேர்ந்த அந்த சிறுவன் பிறக்கும்போது, அவனது தலையில் சிவந்த நிறத்தில் நீண்ட கோடு போன்ற அடையாளம் இருந்துள்ளது. அந்த இனத்தை பொறுத்த வரை அவ்வாறு தோன்றும் அடையாளம் முற்பிறவியை குறிக்கும் என்பது ஐதீகமாகும்.
                                                                                                                              மேலும், . . .

நடு ரோட்டில் லாரி தீபிடித்தது - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ஆலங்குளம், 21-05-2014, 

ஆலங்குளம் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து கேரள மாநிலம் திருவல்லாவுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த லாரி 360 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்றது. லாரியை கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆட்டிங்கல் என்ற இடத்தைச் சேர்ந்த செசுபாலன் (53) என்பவர் ஓட்டினாராம்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை அருகே லாரியில் இருந்து புகை வந்ததாம்.
                 
                                                                                                 மேலும், . . .  

கம்பம் மரம் சாய்ந்து விழுந்து 5 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கி நின்ற போது பரிதாபம்


கம்பம், 21-05-2014,

கம்பம் அருகே ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், மழைக்கு ஒதுங்கி நின்ற 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சூறாவளி காற்றுடன் மழை

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் விநாயகர் கோவில் அருகே பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தின் அருகே சுடுகாட்டில் இறுதி சடங்கிற்கு வருபவர்கள் காத்திருக்கும் வகையில், காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கூடம் பயணிகள் நிழற்குடைபோல் சிமெண்டு கூரையால் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் விவசாய வேலைக்கு வந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலர், ஆலமரம் அருகே உள்ள காத்திருப்போர் கூடத்தில் காத்திருந்தனர்.
                                                                                            மேலும், . . . 

பிரபல ரவுடி வெட்டிக்கொலை

ராஜபாளையம், 21-05-2014,

ராஜபாளையத்தில் பிரபல ரவுடி அழகேந்திரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல ரவுடி

ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலையில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் குற்றாலம் (எ) ராமசாமி என்பவர் மகன் அழகேந்திரன். (வயது 27). பிரபல ரவுடியான இவர் 2007-ம் ஆண்டில்நடந்த வக்கீல் பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்பு உடைய ரமேஷ் என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். மேலும் இவர் மீது வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் மாந்தோப்பு குத்தகைக்கு எடுத்து மாங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
                                                                                                                         மேலும், . . .

Tuesday 20 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பதவியேற்பு"ஏழையின் மகனாக நிற்கிறேன்" ஏழைகளுக்கான அரசாக இருக்கும் மோடி கண்ணீர் பேச்சு

புதுடில்லி, 20-05-2014,

இந்திய நாடு எனது தாய் போன்றது என்றும், இந்த தேசத்திற்கான நான் மகனாக இருந்து சேவையாற்றுவேன் என்றும, தான் துவங்கவிருக்கும் பணி குறித்து 'வரும் 2019ல் நான் ரிப்போர்ட் கார்டு கொடுப்பேன்'- என பார்லி., குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி உருக்கமாக பேசினார். வாஜ்பாய் குறித்தும், மக்களுக்கு தாம் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும் பேசும் போது மோடியின் குரல் உணர்ச்சி காரணமாக தழு, தழுத்தது.
'ஒரு ஏழையின் மகனாக உங்கள் முன் நிற்கிறேன் '- புதிய அரசு ஏழைகளை காக்கும் அரசாக இருக்கும் என மோடி கண்ணீர் விட்டபடி உருக்கமாக பேசினார். இந்நேரத்தில் நா தழு, தழுத்த போது தன்னை நிலைப்படுத்திக்கொள்ள மோடி தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார்.

பா.ஜ., பார்லி., குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதும், பார்லி., வளாகத்தில் எம்.பி.,க்கள் குழுமியிருந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது;
                                                                                                                            மேலும், . . . 

தேனி: ஏலக்காய் வியாபாரிகளை கத்தியால் குத்தி ரூ.3 லட்சம் கொள்ளை


கம்பம், 20-05-2014,

சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரிகளான விஜயன், அமீர், நந்தா ஆகிய 3 பேர் தேனி மாவட்டம் கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி இருந்தனர். தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரிகள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் அங்கு சென்று வியாபாரம் தொடர்பாக அவர்களிடம் பேசினர்.
                                                                                                       மேலும், . . . 

அணையில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி, அணையில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தென்காசி, 20-05-2014,

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கண்ணுப்புளிமெட்டு பகுதியில் உள்ள குன்டாறு அணைப்பகுதியில் மதுரையை சேர்ந்த தொழிற்நுட்ப கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார். மதுரை சின்னகண்மாயி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மோகன்லால் விடுமுறைக்காக நேற்று நண்பர்களுடன் குன்டாறு
                                                                              மேலும், . . .  

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு 100 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

கம்பம், 20–05-2014

கம்பம் பகுதியில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறகிறது.

கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரசேன் தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு, மந்தையம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் ஒரு கார் சந்தேகப்படும்படி சென்றது. காரின் பின்னால் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கிப்பிடித்து போலீசார் சோதனை போட்டனர்.

                                                                                                                    மேலும், . . .

Sunday 18 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நரேந்திரமோடி தொலைபேசியில் வாழ்த்து தமிழக அரசுடன் நல்லுறவும் முழு ஒத்துழைப்பும் நிலவும் என்று உறுதி


சென்னை, 19-05-2014,

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது.

ஜெயலலிதா வாழ்த்து

பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து நரேந்திர மோடி, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
                                                                                                    மேலும், . . . 

தி.மு.க., கோட்டையை அசைத்த அதிகார மையம் கோடநாட்டில் வகுக்கப்பட்ட வியூகம்


ஊட்டி, 19-05-2014,

கோடநாடு எஸ்டேட் பங்களாவை, அதிகார மையமாக வைத்து, ஜெயலலிதா வகுத்த தேர்தல் வியூகம், தி.மு.க.,வின் கோட்டையான நீலகிரியை அசைத்து பார்த்துள்ளது. இது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டசபை தொகுதிகள், தி.மு.க.,வின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள். மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகியவை அ.தி.மு.க., செல்வாக்கு பெற்ற தொகுதிகள். இந்த அடிப்படையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தன.
                                                                                                        மேலும்,. . . .

ஸ்டாலின் ராஜினாமாவை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு


சென்னை, 19-05-2014,

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். ராஜினாமா குறித்து கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின் கடிதம் அளித்தார். இதற்கிடையே ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். ஸ்டாலின் பணி கட்சிக்கு தேவை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து மனம் தளராமல் பணி புரிய வலியுறுத்தியுள்ளார். என்று கூறியுள்ளார்.

                                                                                                             மேலும், . . .

தேர்தல் வெற்றி: கோடீஸ்வரர்கள் 442; குற்றப் பின்னணி கொண்டவர்கள் 186 


புதுடில்லி, 19-05-2014,

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் என்பதும், 186 பேர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்டவை குறித்து தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், தெரிய வந்துள்ள விவரங்கள்:
                                                                                                            மேலும், . . .

இன்றைய முக்கிய செய்திகள் (18-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் ராஜினாமா?

புதுடில்லி, 18-05-2014, 

நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, பதவிகளை ராஜினாமா செய்ய, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவர் ராகுலும் முடிவு செய்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோல்விக்கு பொறுப்பு

லோக்சபா தேர்தல் தோல்வியால், காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 206 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.  நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, சோனியாவும், ராகுலும், தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். அப்போது,  அவர்கள் இருவரின் மனநிலையும்,  குரலும்,  உடைந்து காணப்பட்டது.
                                                                                                           மேலும், . . . .

பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்கு


புதுடெல்லி, 18-05-2014,

தேர்தல் ஆணையம் முதல் முறையாக இந்த தேர்தலில் ‘நோட்டா’ என்ற பொத்தானை வாக்களிக்கும் கருவியில் அறிமுகப்படுத்தி இருந்தது. ‘நோட்டா’ என்பதற்கு ‘மேற்காணும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பம் இல்லை’ என்பது அர்த்தம்.

இந்த தேர்தலில் 543 தொகுதிகளில் வாக்களித்த, மொத்த வாக்காளர்களில் 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 பேர் (மொத்த ஓட்டில் 1.1 சதவீதம்) நோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். மாநில அளவில் புதுச்சேரியில் 3 சதவீதம் பதிவாகி இருந்தது. இவ்வாறு மற்ற மாநிலங்களில் வாக்கு விவரம் சதவீதத்தில் வருமாறு:–                                             
                                                                               மேலும்,  . . . .


மன்மோகன் சிங் மந்திரிசபை ராஜினாமா பதவி விலகுமுன் நாட்டு மக்களுக்கு உருக்கமான உரை

புதுடெல்லி, 18-05-2014,

மன்மோகன் சிங் மந்திரிசபை ராஜினாமா செய்தது. பதவி விலகுமுன் நாட்டு மக்களுக்கு அவர் உருக்கமாக உரை ஆற்றினார்.

தோல்வியால் விலகல்

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் அபார வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. நரேந்திர மோடி தலைமையில் புதிய மந்திரிசபை 21–ந் தேதி பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு பதவி ஏற்பதற்கு ஏற்ற வகையில், 10 ஆண்டு கால பிரதமர் மன்மோகன் சிங் அரசு 17–ந் தேதி பதவி விலகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
                                                                                                            மேலும், . . .. 

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் பயணம் மோடிக்கு டெல்லியில் அமோக வரவேற்பு 16 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்
புதுடெல்லி, 18-05-2014,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது.

டெல்லியில் மோடி

நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து, பாரதீய ஜனதாவை இந்த அபார வெற்றிக்கு வழிநடத்திய அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதன் முதலாக குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து நாட்டின் தலைநகர் டெல்லிக்கு நேற்று சென்றார்.
                                                                                                                          மேலும், . . . 

Friday 16 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலில் 283 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது


புதுடெல்லி, 17-05-2014,

இந்திய ஜனநாயகத்தின் திருக்கோவில் என்று வர்ணிக்கப்படக்கூடிய பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன.

பெரும் எதிர்பார்ப்பு

இந்த தேர்தல் முடிவுகளை நமது நாடு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தன. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 989 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட உடன் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஒரு சில மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலை பெற்று வெற்றி முகம் காட்டத்தொடங்கின.

தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆரம்பம் முதல் முன்னணி பெற தொடங்கினார்கள்.
                                                                                                          மேலும், . . . . 

40 தொகுதிகளில் போட்டி - 37–ல் வெற்றி அ.தி.மு.க. வரலாற்று சாதனை



சென்னை, 17-05-2014,

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

அ.தி.மு.க. தனித்து போட்டி

இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியது

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது உரையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
                                                                                                 மேலும், . . . 

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம் பெறுமா? முதல்வர் ஜெயலலிதா பேட்டி



சென்னை, 17-05-2014,

''அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நேற்று, ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், 37 தொகுதிகளில், அ.தி.மு.க., முன்னிலை வகிப்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
                                                                                              மேலும், . . . 

எம்.ஜி.ஆர்., காலத்தில்கூட, இந்தளவுக்கு அதிக அளவிலான ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றதில்லை



சென்னை, 17-05-2014,

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 44.3 சதவீத ஓட்டுகளுடன், 37 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்று உள்ளது. இது, அந்த கட்சிக்கு கிடைத்து உள்ள வரலாறு காணாத வெற்றி. யாராலும் வெல்ல முடியாத, எம்.ஜி.ஆர்., இருந்தபோது கூட, லோக்சபா தேர்தலில், இத்தகைய வெற்றியை அந்த கட்சி பார்த்து இல்லை என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா தலைமையில் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது, அவருக்கும், அ.தி.மு.க.,விற்கும், தமிழக அரசியலில் மிகப்பெரிய ஏற்றத்தை தரும் என்ற கருத்து உருவாகி உள்ளது.

சாதனை

அ.தி.மு.க., 1972ம் ஆண்டு, 17ம் தேதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டது. அது முதல், 11 லோக்சபா தேர்தல்களை, அந்த கட்சி தமிழகத்தில் சந்தித்திருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தமிழக சட்டசபைக்கு போட்டியிட்டு, எம்.ஜி.ஆர்., பெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், லோக்சபாவில் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவர் வெற்றி பெற்றதில்லை.அதுவும், தமிழக அரசியலில், மிகப் பெரிய சக்தியாக பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களை சந்தித்தார். அந்த மூன்று தேர்தல்களிலும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டார்.
                                                                                                         மேலும், . . . .

Wednesday 14 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க தீவிரம் நரேந்திர மோடி தலைமையில் 20 மத்திய மந்திரிகள் பட்டியல் ரெடி

புதுடெல்லி, 14-05-2014,

ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும். அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நரேந்திர மோடி இன்று காந்தி நகரில் கட்சி தலைவர் களை சந்தித்து மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். பாரதீய ஜனதா ஆட்சியில் நரேந்திர மோடி தலைமையில் 20 மந்திரிகள் மட்டுமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
                                                                                      மேலும், . . . .

சென்னையில் கொலை செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் உடல் தோண்டி எடுப்பு துணை நடிகை சுருதி முக்கிய குற்றவாளி : பரபரப்பு தகவல்கள்!

நெல்லை, 14–05-2014,

சினிமா பைனான்சியர் கொலை செய்த புதைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக துணை நடிகை சுருதி இருந்துள்ளார் என்ற பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன.
சினிமா பைனான்சியர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொன்ற புதைக்கப்பட்ட சம்பவத்தில் துணை நடிகை சுருதியை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூர் விரைந்துள்ள நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கொன்று புதைக்கப்பட்ட பைனான்சியர் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படும் நடிகை சுருதி சந்திரலேகா இன்னும் ஓரிரு நாளில் போலீசில் சிக்குவார் என்று தெரிகிறது.
                                                                                                              மேலும், . . .  




ராஜபாளையத்தில் கவுன்சிலர் கொலை: வி.சி கட்சி பிரமுகர்கள் 4 பேர் கைது

ராஜபாளையம், 14–05-2014,

ராஜபளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். (வயது 37) இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ராகுல் (14) என்ற மகனும், அட்சயா (12) என்ற மகளும் உள்ளனர்.
மீனாட்சி சுந்தரம் ராஜபாளையம் நகராட்சி 17–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராகவும், எம்.ஜி.ஆர். இளைஞரணி நகர செயலாளராகவும் இருந்து வந்தார். நேற்று காலை அவர் இருசக்கர வாகனத்தில் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த மீனாட்சிசுந்தரம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
                                                                                                    மேலும், . . . .  

முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்


சென்னை, 14–05-2014,

வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஜானகி நகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன் (60). இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகர் ஆவார்.
நடராஜன் என்பவர் வீட்டில் உஷா சங்கர நாராயணன் வாடகைக்கு இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு நாய்கள் மீது பிரியம். நான்கு தெரு நாய்களை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு பயிற்சி கொடுத்து தன்னுடனேயே வைத்துள்ளார்.

உஷா தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் பாஸ்கரன் என்பவர் மனைவி கலையுடன் வசிக்கிறார். அவர்கள் உயர் ரக நாய் வளர்க்கின்றனர். அந்த நாயை பார்த்து உஷா வளர்க்கும் நாய்கள் குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு மூண்டது. உஷாவை வீட்டில் இருந்து காலி செய்ய வைக்கும்படி உரிமையாளரை வற்புறுத்தினார்களாம்.

உஷா மற்றும் கலை தங்கி இருக்கும் வீடுகளுக்கு அருகில் நடிகை சங்கீதா கணவர் கிரிஷ்சுடன் வசிக்கிறார். இவரும் உஷா வளர்க்கும் நாய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கலைக்கு ஆதரவாக சங்கீதா வந்தாராம். நடுத்தெருவில் சங்கீதாவும் அவரது கணவர் கிரிஷ்சும் தன்னை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக உஷா வளசர வாக்கம் போலீசில் புகார் செய்தார்.
                                                                                              மேலும், . . .

Sunday 11 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

 இன்று இறுதிக்கட்ட தேர்தல் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

புதுடெல்லி, 12-05-2014,
 

மக்களவைக்கு 9-ஆவது மற்றும் இறுதிக் கட்டமாக திங்கள்கிழமை (மே 12) தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிகாரில், தேர்தல் நடைபெறும் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மக்களவைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி, 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 8 கட்டங்களாக, 502 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 9-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலாக, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
                                                                                                     மேலும், . . . . 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம் நீதிபதி கே.டி.தாமஸ் கருத்து

மூணாறு, 12-05-2014,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று கேரள மாநில அரசு மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை

சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக வழக்கு நடந்தபோது அணை கேரள மாநில அரசு சார்பில் பிரதிநிதியாக இருந்தவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ். இவர் சமீபத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்றதாக கூறப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் புதிய பெரியாறு அணை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் குழுக்கள் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூறியிருப்பதாவது:-
                                                                                             மேலும், . . .

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி லாரி மீது கார் மோதல் கணவருடன், ஐகோர்ட்டு பெண் அதிகாரி பலி மகன்கள் உள்பட 3 பேர் படுகாயம்



விருதுநகர், 12-05-2014,

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் லாரி மீது மோதியது. இதில் கணவன்–மனைவி பலியானார்கள். மகன்கள் உள்பட 3பேர் படுகாயமடைந்தனர்.

ஐகோர்ட்டு உதவியாளர்

சென்னை பாடியில் உள்ள பாடம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஞானதாஸ் (வயது 55). இவர் புரசை வாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவரது மனைவி எஸ்தர் ஞான சுகிர்தம்(53). சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களது மகன்கள் அபிசேக்(18), அஸ்வின்(14). இவர்கள் அனைவரும் காரில் தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சென்றனர்.

                                                                                                                                                மேலும், . . .


பயமுறுத்தும் "எல் நினோ'!


பசிபிக் பெருங்கடலில் "எல் நினோ' உருவாகி வருகிறது என்பதும் அதன் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என்பதும் நம்மைக் கவலைப்பட வைக்கிறது. பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடலுக்குள்ளே ஏற்படும் மாற்றங்கள் தெற்காசியாவில் பருவ மாற்றங்களைத் தீர்மானிக்கும் என்பது புவியியல் வல்லுநர்களுக்கும், வானிலை ஆய்வாளர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைகளை ஒட்டிய பகுதிகளின் ஆழ்கடலில், கீழ்மட்டத்தில் உள்ள நீரின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படி வெப்பம் அதிகரித்து மேல் மட்டத்திலும் நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது ஏற்படுவதுதான் "எல் நினோ' விளைவு. "எல் நினோ' உருவாகும்போது, அது சூல் கொண்ட மேகம் உருவாகாமல் செய்து விடுகிறது.
                                                                                          மேலும், . . . 

Tuesday 6 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

வாக்கு எண்ணிக்கையை இணையதளத்தில் ஒளிபரப்புவது சாத்தியமில்லை பிரவீன்குமார்

கோவை, 06-05-2014,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16–ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.
தேர்தல் தொடர்பாக இது வரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16–ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
                                                                                                               மேலும், . . . .

திருச்சி: வக்கீல் கொலையில் கூட்டாளிகள் 3 பேரை பிடித்து தீவிர விசாரணை




திருச்சி, 06-05-2014,

திருச்சி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி ஷகீலா (40). இந்த தம்பதியினருக்கு நிசாந்த் (16) என்ற மகனும், பெருநாளினி (14) என்ற மகளும் உள்ளனர். திருச்சி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்த மதியழகன் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட மேலும் பல தொழில்களும் செய்து வந்தார்.

தினமும் இவர் காலை மற்றும் இரவு நேரங்களில் வாக்கிங் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் தனது வளர்ப்பு நாயுடன் உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரின் அருகே உள்ள குறுகலான சந்தில் மதியழகன் நடைபயிற்சி சென்றார்.
                                                                                                                            மேலும், . .

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் நடமாடுவதாக மிரட்டல்

சென்னை, 06-05-2014,

கடந்த 1–ந்தேதி பெங்களூரில் இருந்து வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்று இருந்தபோது குண்டு வெடித்து சுவாதி என்ற இளம்பெண் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பு சதிகாரர்கள் பற்றி இன்னும் முழுமையாக துப்பு துலங்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குண்டு வெடிப்புக்குப் பின் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளும், அவர்களது உடைமைகளும் கடுமையாக சோதிக்கப்படுகின்றன. பயணச்சீட்டு மற்றும் பிளாட்பார நுழைவுச்
                                                                                                               மேலும், . . . .

கார் குண்டு மூலம் தாக்குதல் எச்சரிக்கை சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

சென்னை, 06-05-2014,

தென் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
                                                                                                            மேலும், . . . . .

Sunday 4 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே பயங்கர விபத்து ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி 145 பயணிகள் படுகாயம்

மும்பை, 05-05-2014,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் திவா மற்றும் ரத்ன கிரி மாவட்டம் சாவந்த்வாடி இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

தடம் புரண்டது

இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல திவாவில் இருந்து புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறி சென்றனர். இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
ராய்காட் மாவட்டம் நாகோதானே மலை அடிவார பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை கடந்து ரெயில் சென்றது. காலை 9 மணி அளவில் நாகோதானே மற்றும் ரோகா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு வளைவில் சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.
                                                                                                                        மேலும், . . . .

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேடுதல் வேட்டை தீவிரம் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ள அதிரடி உத்தரவு

சென்னை, 05-05-2014,

மக்களின் உயிரோடு விளையாடும் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும்படி, போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குண்டு வெடிப்பபு

கடந்த மே 1–ந் தேதி அன்று அகில இந்தியாவையே உலுக்கிய ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் வழியில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நிற்கும்போது, கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ரெயிலின் எஸ்–4, எஸ்–5 பெட்டிகளில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த நாசகார குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி பரிதாபமாக உயிரை இழந்தார். 14 பயணிகள் காயம் அடைந்தனர்.

5 மாநிலங்களில் முகாம்

நெஞ்சை பதற வைக்கும் இந்த படுபாதக சம்பவத்தை, அகில இந்தியாவே கண்டித்துள்ளது.
                                                                                                         மேலும், . . . . . 

மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம் 11 தீவிரவாதிகள் கைது, பின்லேடன் உறவினர் திடுக்கிடும் தகவல்

கோலாலம்பூர், 05-05-2014,

மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய விமானம் மாயம்

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை.

திடீர் திருப்பம்

இந்த நிலையில், மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் மாயமானதில், அமெரிக்காவில் நியூயார்க் 110 மாடி உலக வர்த்தக மைய கட்டிடம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது
                                                                                        மேலும், . . . . 
பாராளுமன்றத்துக்கு 8–வது கட்ட தேர்தல் 64 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

புதுடெல்லி, 05-05-2014,

பாராளுமன்றத்துக்கு 8–வது கட்டமாக நாளை மறுதினம் (புதன்கிழமை) 64 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது.

8–வது கட்ட தேர்தல்

543 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதுவரை 7 கட்டங்களாக 437 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. 8–வது கட்டமாக ஏழு மாநிலங்களில் பரவியுள்ள 64 தொகுதிகளில் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மாநில வாரியாக தேர்தலை சந்திக்கிற தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:–
                                                                                         மேலும் , . . . 

Saturday 3 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நாசவேலை நடத்த சதித்திட்டம் தமிழகத்துக்கு கடல் வழியாக மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை, 04-05-2014,

பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வியாழக்கிழமை காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அதில் 2 குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்பு பற்றி விசாரணை

இதில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்கள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னா ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த குண்டு வெடிப்பிலும், சென்னை சென்டிரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
                                                                                                 மேலும், . . . 

சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன் ஜெயலலிதா சென்னை வந்து இருக்க வேண்டாமா? - கருணாநிதி அறிக்கை

சென்னை, 04-05-2014,

சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன், ஜெயலலிதா சென்னை வந்து இருக்க வேண்டாமா? என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை குண்டு வெடிப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குண்டுவெடித்தது பற்றியும், அதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
                                                                                                                              மேலும், . . .

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் சாவு குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு

காபூல், 04-05-2014,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதையுண்டு போனது. குறைந்தது 2 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர். குவியல், குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

நிலச்சரிவு

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகியநாடுகளின் எல்லைப்பகுதியில் பதக்ஷான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது.இந்த மாகாணத்தில் உள்ள பரீக் என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரண்டு மசூதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
                                                                                                                மேலும், . . . 

3–வது அணி ஆட்சி அமைக்க ஆதரவு கிடையாது ராகுல்காந்தி அறிவிப்பு

அமேதி, 04-05-2014,

‘‘3–வது அணி ஆட்சி அமைக்க ஆதரவு கிடையாது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெறும்’’ என ராகுல்காந்தி அறிவித்தார்.

3–வது அணிக்கு ஆதரவு?

நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன. ஆனால் அதைத் தவிர்ப்பதற்காக 3–வது அணி அரசு அமைக்க ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கலாம் என அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பிரிதிவிராஜ் சவான், சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போன்றவர்கள் கருத்து வெளியிட்டனர். ஆனால் இதை ராகுல்காந்தி ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகின.

எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது

இந்த நிலையில் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது அமேதி தொகுதியில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதனிடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம்,
                                                                                                                            மேலும், . . . 

Friday 2 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் பிரகாஷ் கரத் நம்பிக்கை

புதுடெல்லி, 03-05-2014,

தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் ஆதரவு தரும்

தேர்தலுக்கு பின்பு 3–வது அணியின் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமையும் சூழ்நிலை உருவானால் அப்போது காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் சூழ்நிலை ஏற்படும். மத்தியில் பா.ஜனதா அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பாது. அதனால் மதசார்பற்ற மாற்று அரசை அமைப்பதில் காங்கிரஸ் தனது பங்களிப்பை தரவேண்டிய நிலை வரும்.
எனவே, 1966–ம் ஆண்டு தேவேகவுடாவின் ஆட்சிக்கு வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததுபோல் இப்போதும் தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
                                                                                              மேலும், . . . 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் குண்டு வெடித்து பெண் பலி குண்டு வைத்த சதிகாரர்கள் பற்றி துப்பு துலங்குகிறது 5 மாநிலங்களுக்கு சென்று தனிப்படை போலீஸ் விசாரணை

சென்னை, 03-05-2014,

பெங்களூரில் இருந்து சென்னை வழியாக அசாம் மாநிலம் கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து நின்றபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 குண்டு கள் வெடித்தன.

குண்டு வெடித்து பெண் பலி

அந்த ரெயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் இந்த குண்டுகள் வெடித்தன.

இதில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி (வயது 24) என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
                                                                                                          மேலும், . .. 

பெண்ணை வேவு பார்த்ததாக புகார் நரேந்திர மோடி விவகாரத்தை விசாரிக்க 16–ந்தேதிக்கு முன் நீதிபதி நியமனம் உள்துறை மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, 03-05-2014,

குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க நரேந்திர மோடி உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரிப்பதற்காக, 16–ந் தேதிக்கு முன் நீதிபதி நியமிக்கப்படுவார் என மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

வேவு பார்ப்பு?

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத் முதல்–மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்குமாறு கூறியதன் பேரில், மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த அமித் ஷா, இது தொடர்பாக காவல்துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
                                                                                                          மேலும், . . . 

நாங்குநேரி ஜீயர் மரணம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை, 03-05-2014,

நாங்குநேரி ஜீயர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

முக்தி அடைந்தார்

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–

                                                                                             மேலும், . . . .