Thursday 22 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மோடி பதவியேற்பு விழா அழைப்பை ஜெயலலிதா ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி சுப்பிரமணிய சுவாமி கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி, 22-05-2014,

புதிய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26 ந்தேதி பதவி ஏற்று கொள்கிறார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள், தூதரக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. குறிப்பாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
                                                                                                                    மேலும், . . .
கிருஷ்ணராயபுரம் அருகே வாலிபர் அடித்து கொலை போலீசார் விசாரணை

கிருஷ்ணராயபுரம், 22-05-2014

கிருஷ்ணராயபுரம் அருகே வாலிபரை அடித்து கொன்று பிணத்தை முள்காட்டில் போட்டுவிட்டு சென்ற கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

முள்காட்டில் வாலிபர் பிணம்

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட மணவாசி சமத்துவபுரம் அருகே உள்ள முள்காட்டிற்கு நேற்று காலை விறகு எடுக்க அந்த பகுதி பெண்கள் சென்று உள்ளனர். அப்போது முள்காட்டில் ஒரு வாலிபர் முகம் மற்றும் தலையில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு திடுக்கிட்ட அவர்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
                                                                           மேலும்,. . . .

2 ஆண்டுகளுக்குப்பின் சடலம் தோண்டியெடுப்பு 

கரூர், 22-05-2014,

அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனியில் தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக மகன் வழக்கு தொடர்ந்ததையடுத்து 2 ஆண்டுகளுக்கு பின் பிரேத பரிசோதனைக்காக உடல் புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள சீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (50). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் "டையிங்' கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
                                                                                          மேலும், . . . 

மகாபலிபுரம் அருகே விபத்து 3 பேர் பலி நடிகர் நாசரின் மகன் படுகாயம்

சென்னை, 22-05-2014,

நடிகர் நாசரின் மகன் பைசல் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் பலியாகினர்.நடிகர் நாசரின் மகன் பைசல் சைவம் படத்தில் பாஷா என்ற பெயரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றும் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
                                                                                                                    மேலும், . . .

No comments:

Post a Comment