Wednesday 1 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (01-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-04-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளை இடிக்க உத்தரவு 9-ந்தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறி

புதுடெல்லி, ஏப்ரல், 01-04-2015,
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக கட்டப்பட்ட 3 பார்வையாளர்கள் கேலரிகளை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 புதிய கேலரிகள்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடுதலாக ஐ, ஜே, கே என்ற 3 பார்வையாளர்கள் கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த 3 கேலரிகளிலும் மொத்தம் 12 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம்.
இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்பதால் சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
                                                                                                  மேலும்....

உடன்குடி அனல் மின் திட்டத்தை ரத்து செய்ததற்கு காரணம் என்ன? சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
உடன்குடி அனல் மின் திட்டத்தை ரத்து செய்ததற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை
உடன்குடி அனல் மின்நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை விளக்கம் கேட்டன. விசாரணைக் கமிஷன் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அரசால் வெள்ளை அறிக்கை வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சிகள் கோரின.
தி.மு.க. செயல்படுத்தவில்லை
இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்து பேசியதாவது:-
                                                                                                   மேலும்....

தே.மு.தி.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் தண்டனை நீட்டிப்பு அடுத்த கூட்டத்தொடரில் 10 நாட்கள் வரை பங்கேற்க முடியாது

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி, 10 நாட்களுக்கு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
உரிமைமீறல் பிரச்சினை
சட்டசபையில் கடந்த மாதம் நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தே.மு.தி.க. சட்டமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ் தெரிவித்த சில கருத்துக்களால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது அவைக்காவலர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை நடைபெற்று வரும் கூட்டத்தொடர் முடிய இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி இந்த கூட்டத்தொடர் முடிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் சட்டசபை உரிமைக்குழு ஆய்வுக்கு விடப்பட்டது.
                                                                                          மேலும்....

அண்ணா நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் - கருணாநிதி அறிக்கை

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
அண்ணா நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது
பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்காலச் சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவு பூர்வமாகச் செழுமைப்படுத்திக்கொள்ள; நீண்ட காலத்திற்கு பயன்படுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை தி.மு.க. ஆட்சியில் நான் நிர்மாணித்தேன்.
நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றப்போகிறேன் என்று அறிவித்தார். தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு நீதி மன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமலாகாமல் உள்ளது.
குழந்தைகள் மருத்துவமனை
அ.தி.மு.க. ஆட்சி தொடங்கிய உடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில்
                                                                                           மேலும்....

No comments:

Post a Comment