Tuesday 7 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2015) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்க வருகிற 15-ந்தேதி வரை சுப்ரீம் கோர்ட் தடை

புதுடெல்லி, ஏப்ரல். 07-04-2015,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பளிக்க தடையில்லை இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார்.
                                                                                                    மேலும்....

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் வேளாண் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய மேலும் 8 பேர் கைதாகிறார்கள்


வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவ்வழக்கில் மேலும் 8 பேர் கைதாவார்கள் என்று தெரிகிறது.
சென்னை, ஏப்ரல். 07-04-2015,
நெல்லை வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்த முத்துக்குமாரசாமி, ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வழக்கை சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது
அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே கேட்
                                                                                                   மேலும்.... 

தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு திருச்சி அரசு மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி அரசியல்வாதிகள் தொல்லை காரணமா?

திருச்சி, ஏப்ரல். 07-04-2015,
திருச்சி அரசு மருத்துவ அதிகாரி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவ அதிகாரி
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அதிகாரியாக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் டாக்டர் நேரு. இவரது வீடு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றிவந்த அவர் 2 மாதங்களுக்கு முன்பு தான் அங்கு இருந்து பணிமாறுதலில் திருச்சி வந்தார்.
                                                                                                       மேலும்....

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை

திருமலை, ஏப்ரல். 07-04-2015,
தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.
ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த செம்மரக்கட்டைகளை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர்.
இதனால் ஆந்திர செம்மரக்கட்டைகள் ஒரு டன் ரூ.10 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. கொஞ்சம் செம்மரக்கட்டை கடத்தி விற்றாலும் லட்சாதிபதி ஆகி விடலாம் என்பதால் திருப்பதி வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தல்காரர்கள் போட்டி போட்டு வெட்டி கடத்துகிறார்கள்.
சமீபகாலமாக செம்மரங்களை கடத்தி வெட்டும் நடவடிக்கைகளில் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏழை தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
நிறைய பணம் கிடைப்பதால் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த
                                                                                                 மேலும்....

No comments:

Post a Comment