Thursday 6 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல் கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்டு கூட்டாக அறிவிப்பு

சென்னை, மார்ச், 07-03-2014,
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.
இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன.
அவசர ஆலோசனை
அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
                                                                                                            மேலும், . . . 

கூட்டணி பேச்சு உறுதி பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச், 07-03-2014,
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தற்போது உறுதி செய்துள்ளது.
எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது. தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அக்கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
                                                                                                       மேலும், . . . 

‘மக்கள் மனதில் வேரூன்றிய கட்சி காங்கிரஸ்’ ராகுல் காந்தி பேச்சு
தானே, மார்ச், 07-03-2014,
‘மக்கள் மனதில் வேரூன்றிய கட்சி காங்கிரஸ்’ என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:–
வேரூன்றிய கட்சி
காங்கிரஸ் கட்சி உதயமானது மராட்டிய மண்ணில் தான். எங்கள் கருத்துக்கள் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவை பகவத் கீதையில் இருந்து எடுக்கப்பட்டவை. மராட்டிய மன்னர் சிவாஜி, ‘சாம்ராட்’ அசோகர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் இந்த கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள்.
                                                                                                மேலும், . . . 

No comments:

Post a Comment