Thursday 27 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன
ஜெனீவா, மார்ச், 28-03-2014,
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
போர்க்குற்றங்கள்
அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஜெனீவா நகரில் உள்ள, 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே தொடர்ச்சியாக 2012 மற்றும் 2013–ம் ஆண்டுகளில் கொண்டு வந்த தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறின.
                                                                                            மேலும், . . . .

தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் தமிழகம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்
சென்னை, மார்ச், 28-03-2014,
தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் வர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
மது சப்ளை
தேர்தல் தினங்களில் வாக்காளர்களை கவர்வதற்காகவும், ஓட்டுக்காக அவர்களை வசப்படுத்தி கொள்வதற்காகவும் அரசியல் கட்சிகள் சார்பில் மது சப்ளை செய்வது வழக்கமான ஒன்று. எனவே ஓட்டுக்காக மது சப்ளை செய்வதை தடுப்பதற்கு தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அதிக மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். எனவே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மதுவை புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வருவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வந்தன.
சோதனை சாவடிகள் அதிகரிப்பு
இதுகுறித்து பிரவீன்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

                                                                                                                மேலும், . . . 

கறுப்பு பண மீட்பு விவகாரம் இந்தியா கேட்ட தகவல்களை சுவிஸ் அரசு தரவில்லை ப.சிதம்பரம் கடிதம் அம்பலம்
புதுடெல்லி, மார்ச், 28-03-2014,
கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் இந்திய கேட்ட தகவல்களை சுவிஸ் அரசு தரவில்லை என்பதை ப.சிதம்பரம் அந்த நாட்டு நிதி மந்திரிக்கு எழுதிய கடிதம் காட்டுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
வெளிநாட்டு வங்கிகளில் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தப்பணத்தை மீட்க கடந்த 65 ஆண்டுகளில் மத்திய அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தது.
                                                                                              மேலும், . . . 

No comments:

Post a Comment