Saturday 8 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 194 பேர் இடம்பெற்றனர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது
புதுடெல்லி, 09-03-2014,
சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 194 பேர் அடங்கிய காங்கிரசின் முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கிரிக்கெட் வீரர் முகமது கைப், வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா ஆகியோருக்கும் ‘சீட்’ தரப்பட்டுள்ளது.
முதல் பட்டியல்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதலாவது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் கமிட்டி, அந்த பட்டியலை இறுதி செய்தது.
அதில், 194 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்திய மந்திரிகள் உள்பட தற்போதைய எம்.பி.க்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுகங்கள், இளைஞர்கள் ஆகியோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 35 சதவீத வேட்பாளர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 15 சதவீதம்பேர் பெண்கள் ஆவர்.
                                                                                                                          மேலும், . . 

சென்னை பெண் உள்பட 239 பேர் பலி சீனா சென்ற மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது
பீஜிங், 09-03-2014,
சீனா சென்ற மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியதில் சென்னை பெண் உள்பட 239 பேர் பலியாகி விட்டனர்.
மலேசிய விமானம்
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் இடையே மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகள் விமானங்களை இயக்கி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் வளர்ந்து வருவதால் இந்த விமானங்களில் பயணம் செய்ய மக்களிடையே நல்ல கிராக்கி உள்ளது.
                                                                                                  மேலும், . . . 

மனைவியை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? நரேந்திரமோடி மீது திக்விஜய்சிங் கடும் தாக்கு
புதுடெல்லி, 09-03-2014,
மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? என்று, நரேந்திரமோடி மீது காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் தாக்குதல் தொடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், சர்வதேச மகளிர் தினமான நேற்று நரேந்திரமோடி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:–
நரேந்திரமோடியின் மனைவி
‘‘நரேந்திரமோடியின் இதயத்தில் பெண்கள் மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தால், அவரிடம் இருந்து சில தகவல்களை அறிய விரும்புகிறேன். தேர்தல் விண்ணப்ப படிவத்தில் அவருடைய மனைவியின் பெயரை குறிப்பிடாதது ஏன்?
                                                                                                      மேலும், . . . 

No comments:

Post a Comment