Sunday 30 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

7-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 2 லட்சம் துணை ராணுவ வீரர்கள் நக்சல் ஆதிக்க பகுதிகளில் கூடுதல் படைகளை குவிக்க முடிவு
புதுடெல்லி, மார்ச், 31-03-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 7–ந் தேதி தொடங்கி மே 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
9 கட்டங்களாக தேர்தல்
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், இந்த தேர்தல்தான் மிக அதிகமாக 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6–வது கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட இருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
                                                                                                             மேலும், . . . .

ஏழைகளைப் பற்றி காங்கிரஸ் அரசு கவலைப்படவில்லை பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
புதுடெல்லி, மார்ச், 31-03-2014,
ஏழைகளைப் பற்றி காங்கிரஸ் அரசு கவலைப்படவில்லை என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியது.
18 கேள்விகள்
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்கா, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டின் பொருளாதார நிலை குறித்து, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு அவர் 18 கேள்விகள் விடுத்தார். அவர் கூறியதாவது:–
                                                                                                      மேலும், . . . 

பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ‘40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்’ தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, மார்ச், 31-03-2014,
40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–
பாராளுமன்ற தேர்தல்
வருகின்ற 24–4–2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும்
                                                                                  மேலும், . . . . 

No comments:

Post a Comment