Friday 28 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
சென்னை, மார்ச், 29-03-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி மே மாதம் 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக் கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 24–ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதே நாளில் ஆலந்தூர்சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது.
                                                                  மேலும், . . .  . . 

2 கல்வித்திட்டங்களில் தமிழகத்துக்கு தரவேண்டியது மத்திய அரசு ரூ.901 கோடியை தரவில்லை என்பது உண்மையா? இல்லையா? முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ப.சிதம்பரத்துக்கு கேள்வி

சென்னை, மார்ச், 29-03-2014,
2 கல்வித் திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.901.76 கோடியை மத்திய அரசு இன்னமும் தரவில்லை என்பது உண்மையா? இல்லையா? என்று மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுபற்றி பேசியதாவது:-
சிதம்பரத்தின் வாடிக்கை
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி கூட்டத்தில் நான் பேசியபோது இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருப்பதற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தான் காரணம் என்று தெரிவித்து இருந்தேன்.
                                                                                                                       மேலும்,. . . .

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்த மேலும் ஒரு மோசடி கும்பல் கைது கவனமாக செயல்பட, பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சென்னை, மார்ச், 29-03-2014,
சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பில் ஈடுபட்ட மேலும் ஒரு மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அதிரடி வேட்டை
சென்னை நகரில், போலி ஏ.டி.எம். கார்டு, போலி கிரெடிட் கார்டு, போலி அரசு ஆவணங்கள், போலி ரேஷன்கார்டு மற்றும் போலி வாக்காளர் அட்டை தயாரித்து, மெகா மோசடியில் ஈடுபடும் கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த சில நாட்களில் மட்டும், இது போன்ற மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
நேற்று மேலும் 5 மோசடி ஆசாமிகள், போலீஸ் வேட்டையில் கைதானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
                                                                                                 மேலும், . . . 

No comments:

Post a Comment