Monday 3 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-03-2014) காலை,IST- 03.00 மணி,நிலவரப்படி,

தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட மத்தியில் அ.தி.மு.க. இடம் பெறும் ஆட்சி வேண்டும் காஞ்சீபுரம் கூட்டத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

சென்னை, மார்ச், 04-03-2014,
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியை முதலில் இறுதி செய்த அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
                                                                                                        மேலும், . . . .

7 கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 6–ந் தேதி விசாரணை
புதுடெல்லி, மார்ச், 04-03-2014,
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, ராஜீவ் காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு, 6–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
பொதுநலன் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடன் உயிரிழந்த 14 பேரில் மூன்று பேரின் குடும்பத்தினர் அப்பாஸ், ஜான் ஜோசப், மேலும் 3 பேர், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வரின் உத்தரவுக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
                                                                                                               மேலும், . . . .


2 நாளில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இல்லை கருணாநிதி பேட்டி
சென்னை, மார்ச், 04-03-2014,
தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:–
தி.மு.க. கூட்டணியில்...
கேள்வி:– இன்றுடன் நேர்காணல் முடிந்து விட்டது. எப்போது வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறீர்கள்?
                                                                                                 மேலும், . . . .

No comments:

Post a Comment