Tuesday 18 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


மாயாமான மலேசிய விமானம் விமானத்தின் பாதை கம்யூட்டரில் மாற்றி அமைத்து கடத்தல்
நியூயார்க், மார்ச், 19-03-2014,
கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் எந்தவித தகவலும் இதுவரை தெரியவில்லை. இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. தறபோது விமானத்தை தேடும் தூரம் அதிகரிக்கபட்டு உள்ளது.
விமான பைலட்கள் மீது சந்தேகம்
விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். மலேசிய போலீசார் தலைமை பைலட்டின் குட்ம்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அகமது ஷா மன நிலை எவ்வாறு இருந்து என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த வில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உதவி பைலட் பாரூக் அப்துல் அமீது வீட்டிலும் மலேசிய போலீசார் சோதனை நடத்தினர். அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மாயமான விமானம் எம் எச் 370 கடத்தலுக்கு மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விமானம் காணாமல் போனதை தொடரந்து விமானிகளின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
                                                                                                 மேலும், . . .

தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடிக்கும் பா.ம.க. பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவிப்பு
சென்னை, மார்ச், 19-03-2014,
தொகுதி பங்கீட்டில் பா.ம.க. முரண்டு பிடிப்பதால், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவித்து வருகின்றன. கூட்டணி இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.
பா.ம.க. இடம்பெறுமா?
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பா.ம.க.வும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே, பா.ம.க. 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதனால், அதில் 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. தரப்பில், நீங்கள் வேட்பாளர்கள் அறிவித்ததில் 5 தொகுதிகளை அப்படியே தருகிறோம்.
                                                                                                               மேலும், . . . . 

வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம்; கெஜ்ரிவால் சொல்கிறார்
புதுடெல்லி, மார்ச், 19-03-2014,
வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை தோற்கடிப்பதே எனது முக்கிய நோக்கம் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
கருத்தரங்கில் பேச்சு
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தயார் என்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். நேற்று டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் கருத்தரங்கு ஒன்றில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை எதிர்த்து ஒரு அடையாளத்துக்காக போட்டியிடவில்லை என்றும், அந்த தொகுதியில் அவரை தோற்கடிப்பதே தனது முக்கிய குறிக்கோள் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். கருத்தரங்கில் பேசும்போது அவர் கூறியதாவது;–

                                                                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment