Sunday 16 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி பெங்களூர் பேரணியில் அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச், 17-03-2014,
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் அல்லாத வேறு மாநில தொகுதி ஒன்றில் இருந்து போட்டியிட முடிவு செய்து இருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அதன்படி, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், ஊழலுக்கு எதிராக போராடிவரும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய புதிய கட்சியான ஆம் ஆத்மி, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
                                                                                                              மேலும், . . . 

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை விமானியே கடத்தினாரா? புலனாய்வு அதிகாரிகள் விசாரணை
கோலாலம்பூர், மார்ச், 17-03-2014,
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை விமானியே கடத்தினாரா என்ற கோணத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
மாயமான விமானம்
சென்னை பெண் சந்திரிகா சர்மா மற்றும் 4 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்ற மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி அதிகாலையில் மாயமான மர்மம், தொடர்கதையாய் நீண்டு வருகிறது.இந்த விமானத்தை தேடும் முயற்சியில் 14 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள், செயற்கைக்கோள்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக ஈடுபட்டும் திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருப்பது தொடர்புடைய அனைவரையும் தளர்ச்சி அடையச்செய்துள்ளது.
                                                                                                     மேலும், . . . 

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
சென்னை, மார்ச், 17-03-2014,
தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறினார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று மதியம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment