Thursday 20 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பா.ஜனதா கூட்டணியில் தொகுதி உடன்பாடு தே.மு.தி.க-14, பா.ஜ.க-8, பா.ம.க-8, ம.தி.மு.க-7, கொங்குநாடு-1, ஐ.ஜே.கே-1 கட்சி தலைவர்கள் முன்னிலையில் ராஜ்நாத்சிங் அறிவிப்பு
சென்னை, மார்ச், 21-03-2014,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க இங்குள்ள தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு. தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை சேர்க்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரே தொகுதியை கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
ராஜ்நாத்சிங் வருகை
3 மாத கால முயற்சியின் பலனாக, தற்போது பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 39 அமைப்புகளும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. புதுச்சேரியில், ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
                                                                                          மேலும், . . . 

இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களை கொடூரமாக தாக்கும் சிங்கள ராணுவ அதிகாரிகள் புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
லண்டன், மார்ச், 21-03-2014,
இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவ அதிகாரிகள் கொடூரமாக தாக்கும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இலங்கை ராணுவம் அத்துமீறல்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் போர் நெறிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை ராணுவத்தினர் பிடித்து சுட்டுக்கொன்றனர். இதேபோல் விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவைச்சேர்ந்த இசைப்பிரியாவும் ராணுவத்தினரால் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
                                                                                        மேலும், . . . 

காந்தி நகரில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்த அத்வானி சமாதானம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி சந்திப்பால் மனமாற்றம்
புதுடில்லி, மார்ச், 21-03-2014,
லோக்சபா தேர்தல், பா.ஜ., வேட்பாளர், ஐந்தாவது பட்டியல், நேற்று முன்தினம், இரவில் வெளியானது. அதில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கூடுதலாக, குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவார் எனவும், மூத்த தலைவர், அத்வானி, அவரின், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் எனவும், அறிவிப்பு வெளியானது.
மத்திய பிரதேசத்தின், போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானிக்கு, குஜராத்தின், காந்திநகர் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த அவரை, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி சந்தித்து பேசி, சமாதானப்படுத்தினார். இதையடுத்து, வழக்கம் போல், காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிட,

                                                                                                 மேலும், . . . 

No comments:

Post a Comment