Saturday 29 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் ராகுல் காந்திக்கு நரேந்திர மோடி பதிலடி ‘‘நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம்’’
பாக்பத், மார்ச்,30-03-2014,
நாட்டுக்காக வாழ்வதும், உயிர் விடுவதும்தான் எங்கள் சித்தாந்தம் என்று உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்திக்கு நரேந்திரமோடி பதிலடி கொடுத்தார்.
ராகுலுக்கு பதிலடி
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘ஒரு தனிப்பட்ட நபர் என்ற முறையில் நரேந்திரமோடிக்கு எதிராக என்னிடம் ஏதுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான அவரது சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன். மோடி, ஒரு பிரத்யேகமான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார். அது, மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளச்செய்யும் சித்தாந்தம்’’ என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம், பாக்பத்தில் (முன்னாள் பிரதமர் சரண்சிங் தொகுதி) நரேந்திரமோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனது சித்தாந்தம் பற்றி ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                       மேலும், . . . 

துண்டு, துண்டாக வெட்டி கூறுபோடுவேன் என்று பேச்சு மோடியை மிரட்டிய காங். வேட்பாளர் கைது சிறையில் அடைக்கப்பட்டார்
லக்னோ, மார்ச்,30-03-2014,
உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் இம்ரான் மசூத் (வயது 40).
மிரட்டல் பேச்சு
இவர், சகரன்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடுமையாக தாக்கினார்.
                                                                                        மேலும், . . . . 

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் நிர்மூலமாகும் ராமநாதபுரம் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

சென்னை, மார்ச்,30-03-2014,
சேது சமுத்திர கால்வாய் திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் நிர்மூலமாகும் என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
ராமநாதபுரத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அ.அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மின்வெட்டு
மின் உற்பத்தியை எடுத்துக்கொண்டால், எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். ஒரு வாரத்திற்கு முன்பு சில மின் நிலையங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓரிரு நாட்கள் மின்வெட்டு ஏற்பட்டது.
                                                                                                   மேலும், . . . . 

No comments:

Post a Comment