Friday 21 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

 5 முனை போட்டியால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்


சென்னை, மார்ச், 22-03-2014,
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
5 முனை போட்டி
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தும் போட்டியிடுவதால் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
                                                                                                 மேலும், . . . 

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆஸ்பத்திரியில் நேரில் சம்மன் அமெரிக்காவில் தான் இல்லவே இல்லை என்று சோனியா மறுப்பு நிரூபிக்க பாஸ்போர்ட்டு நகலை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
நியூயார்க், மார்ச், 22-03-2014,
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சோனியாவிடம் சம்மன் வழங்கியதாக சீக்கிய அமைப்பு கூறுகிறது. சோனியாவோ, அப்போது தான் அமெரிக்காவில் இல்லவே இல்லை என்று மறுத்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக பாஸ்போர்ட்டு நகலை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
சோனியா மீது வழக்கு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984–ம் ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியிலும், நாட்டின் பிற இடங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் மூண்டன.
                                                                                        மேலும், . . . . 

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதி விருதுநகர் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

விருதுநகர், மார்ச், 22-03-2014,
நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்று விருதுநகர் தொகுதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று திருத்தங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
சாதாரண தேர்தல் அல்ல
வருகின்ற மக்களவைத் தேர்தல் சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கக் கூடிய தேர்தல். நம்முடைய துயரங்களை தீர்க்க, வகை செய்யும் தேர்தல். இந்திய நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவை மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த மாற்றத்தை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்.
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல. மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். அதை நீங்கள் தான் செய்ய முடியும்.
                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment