Saturday 30 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

அம்பையில் பட்டப்பகலில் பயங்கரம் டாக்டர் மனைவியுடன் படுகொலை வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் வெட்டிச் சாய்த்தனர்



அம்பை, டிசம்பர், 01-12-2013,
அம்பையில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற டாக்டர், மனைவியுடன் படுகொலை செய்யப்பட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் இருவரையும் வெட்டிச் சாய்த்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
ராணுவ டாக்டர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 74). ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி ஜான்சிராணி. கணவன்– மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடைய மூத்த மகள் ஜாய்கோனா கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். 2–வது மகள் முத்துபிரியா ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
டாக்டர் அருள், வீட்டில் இருக்கும் போது ஒருசிலருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர்களுக்கு ஆண்டாள் என்ற வேலைக்கார பெண் உதவியாக இருந்து வந்தார். மாதத்தில் சில நாட்கள் மட்டுமே டாக்டர் தனது வீட்டில் இருப்பார். மற்ற நாட்களில் மகள்களின் வீடுகளுக்கு சென்று விடுவார்.
மனைவியுடன் படுகொலை
வேலைக்கார பெண் நேற்று மாலை 4.30 மணி அளவில் டாக்டர் வீட்டுக்கு சென்றார். வழக்கமாக டாக்டரும், அவருடைய மனைவியும் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும். நேற்று மாலை வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இருவரும் இன்னும் தூங்கி விழிக்கவில்லையா என நினைத்துக் கொண்டே வேலைக்கார பெண், வீட்டுக்குள் நுழைந்தார். அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அங்கு டாக்டரும், அவருடைய மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதைக்கண்ட வேலைக்கார பெண், அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடி வந்தனர். டாக்டர் மனைவியுடன் வீட்டுக்குள் பிணமாக கிடந்ததை அந்த பெண் கூறினார். அக்கம் பக்கத்தினர் டாக்டரின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
மர்ம மனிதர்கள் வெறிச்செயல்
அங்கு டாக்டர் அருள், அவருடைய மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடந்தார்கள். டாக்டரின் வயிற்றுப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டு குடல் சரிந்து இருந்தது. அவருடைய மனைவி தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் கயிற்றால் கழுத்தை இறுக்கிய தடம் உள்ளது. இருவரையும் யாரோ மர்ம மனிதர்கள் அரிவாளால் வெட்டியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளனர்.
                                                                                                                                     மேலும் படிக்க.....

No comments:

Post a Comment