Friday 13 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் சிறிசேனாவை சந்தித்தபின் நரேந்திரமோடி பேட்டி


சிறிசேனாவை சந்தித்த பின் நிருபர் களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அரசு விரைவாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
கொழும்பு, மார்ச். 14-03-2015,
பிரதமர் நரேந்திர மோடி செசல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக கடந்த 10-ந் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இலங்கையில் மோடி
முதலில் செசல்ஸ் நாட்டுக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து மொரீஷியஸ் சென்றார்.
மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு போர்ட்லூயிஸ் நகரில் இருந்து, இலங்கைக்கு புறப்பட்ட அவர், நேற்று அதிகாலை 5.25 கொழும்பு நகர் போய்ச் சேர்ந்தார். அங்குள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
விமானநிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும்,
                                                                                                               மேலும்....

நில எடுப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்தது ஏன்? கருணாநிதிக்கு, ஜெயலலிதா பதில்

சென்னை, மார்ச். 14-03-2015,
நிலஎடுப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்தது ஏன்? என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கேள்விக்கு ஜெயலலிதா பதிலளித்து உள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் முடிவு
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடைமுறையில் இருந்த நில எடுப்பு சட்டத்திற்கு மாற்றாக, ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ என்னும் சட்ட முன்வடிவினை 2013-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது. இந்தச்சட்டம் 1-1-2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தில் சில திருத்தங்களை பா.ஜ.க. அவசர சட்டம் மூலம் கடந்த 31-12-2014 அன்று கொண்டு வந்தது.
                                                                                                        மேலும்....

டிராபிக் ராமசாமியை கைது செய்ய போலீசாருக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? அரசு தரப்பிடம், ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

சென்னை, மார்ச். 14-03-2015,
கிரிமினலை கைது செய்வதுபோல், அதிகாலையில் வீடு புகுந்து டிராபிக் ராமசாமியை கைது செய்ய போலீசாருக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்று ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் அரசு தரப்பு வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார்.
ராமசாமி கைது
வீரமணி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமியை வேப்பேரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், ஜி.ரவிகுமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
தற்போது, டிராபிக் ராமசாமியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை வழங்க புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாலை கைது
இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
                                                                                                                    மேலும்....

நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு கேரள சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு சபாநாயகரின் நாற்காலி வீச்சு: மோதலில் 20 எம்.எல்.ஏ.க்கள் காயம்



திருவனந்தபுரம், மார்ச். 14-03-2015,
கேரள சட்டசபையில் நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சிகளுக்கும், சபை பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 எம்.எல்.ஏ.க்கள் காயமடைந்தனர்.
லஞ்சப் புகார்
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகிப்பவர், 82 வயது கே.எம்.மாணி. இவர் மூடப்பட்ட மதுபான பார்களை புதுப்பிக்க உரிமம் வழங்கியதில் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. கேரள பார் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பிஜூ ரமேஷ் இந்த குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் மாணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதவி விலக வற்புறுத்தல்
இந்த விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் நிதிமந்திரி மாணி பதவி விலகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி எம்.எல்.ஏ.க்கள் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இதனிடையே, மார்ச் 13-ந்தேதி சட்டசபையில் 2015-2016-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாணி தாக்கல் செய்வார்
                                                                                            மேலும்....

No comments:

Post a Comment