Tuesday 24 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

மாநகராட்சி கமிஷனரின் நண்பர்கள் என்று ஏமாற்றி மோசடி சென்னையில் போலி டாக்டர் தம்பதி கைது வேலைவாங்கி தருவதாக கோடி, கோடியாக சுருட்டியதாக பரபரப்பு தகவல்கள்

சென்னை, மார்ச்.24-
மாநகராட்சி கமிஷனர் தங்கள் நண்பர் என்று ஏமாற்றி, சென்னையில் கோடி, கோடியாக வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் காமராஜ் புகார்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்தார். பிளஸ்-2 வகுப்புக்கு பாடம் நடத்தினார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் அஜீத் என்ற மாணவனுக்கு நான் வீட்டுக்கு சென்று டியூசன் சொல்லிக் கொடுப்பேன்.
                                                                                                               மேலும்....

சென்னையில் நடைபெறுகிறது தமிழ்நாடு, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பேச்சுவார்த்தை நல்லெண்ண நடவடிக்கையாக 54 மீனவர்களை இலங்கை விடுவித்தது

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழக-இலங்கை மீனவ பிரதிநிதிகள் சென்னையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக, சிறைபிடிக்கப்பட்ட 54 மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுவித்தது.
சென்னை, மார்ச்.24-
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
நீடிக்கும் பிரச்சினை
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
                                                                                                                       மேலும்....

2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ ரூ.4,632 கோடிக்கு தாக்கல் சாலை பணிகளுக்கு ரூ.1,862 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச்.24-
2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் ரூ.4,632 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. சாலை பணிகளுக்கு மட்டும் ரூ.1,862 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘பட்ஜெட்’ கூட்டம்
சென்னை மாநகராட்சியின் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.
                                                                                                                          மேலும்....

ஜெயிலுக்கு சென்ற ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல்: போலீஸ்காரர் கடத்திக் கொலை சென்னை கோர்ட்டில் 7 பேர் சரண்

புதுச்சேரி, மார்ச்.24-
ஜெயிலுக்கு கணவனை பார்க்கச் சென்ற ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்ட புதுச்சேரி போலீஸ்காரர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். ரவுடி உள்பட 7 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
போலீஸ்காரர் மாயம்
புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்தவர் ரகு என்ற ரகுபதி (வயது 31). போலீஸ்காரரான இவரது மனைவி தாமரைச்செல்விக்கு (28) சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் வாணரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 19-ந்தேதி ரகுபதி வாணரப்பேட்டைக்கு சென்று மனைவி குழந்தையை பார்த்துச் சென்றார். அதன் பிறகு அவரை காணவில்லை.
இது குறித்து தாமரைச்செல்வி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். ரகுபதியின் புகைப்படம் விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே சாலையோரம், ரவியின் பிணம் ரத்தவெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் அவரது மோட்டார்சைக்கிளும் கிடந்தது. விபத்து என்று கருதிய திருநாவலூர் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த தகவல் முதலியார்பேட்டை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்காதல்
ரகுபதியின் பெற்றோர் சென்று உடலை அடையாளம் காட்டினர்.
                                                                                                                         மேலும்....

No comments:

Post a Comment