Monday 23 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

'வாட்டர் மேன் ஆப் இந்தியா' ராஜேந்திர சிங்கிற்கு உலகின் சிறப்பு மிக்க பரிசு வழங்கப்பட்டது

மார்ச் 23,2015, 11:07 AM IST
1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்து 'வாட்டர் மேன் ஆப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்கிற்கு, இத்துறையில் சிறப்பான செயல்பாட்டிற்காக உலகின் உயர்ந்த பரிசான 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' பரிசு வழங்கப்பட்டது
தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சுவீடனை சேர்ந்த அமைப்பு, ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
                                                                                                 மேலும்....

ஆப்கானில் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் அப்பாவி - விசாரணை அதிகாரி

மார்ச் 23,2015, 10:15 AM IST
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் அப்பாவி என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள மசூதியின் அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தாவை, அப்பகுதியை சேர்ந்த மக்கள் அடித்து கொலை செய்தனர்.
                                                                                          மேலும்....


சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்

சிங்கப்பூர், மார்ச் 23, 2015, 8:55 AM IST
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம் அடைந்தார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
                                                                                                             மேலும்....

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது பிரதமர் மோடி உறுதி

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக கூறிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என்று உறுதி அளித்தார்.
புதுடெல்லி, மார்ச்.23, 2015, 6:30 AM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி விஜயதசமி நாளில் இருந்து நாட்டு மக்களுடன் மாதம் ஒரு முறை ‘மன் கி பாத்’ (‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’) என்ற தலைப்பில், வானொலியில் பேசி வருகிறார்.
வானொலியில் பேச்சு
இது நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றடைவதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் நேற்றும் அவர் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் 30 நிமிடங்கள் பேசினார். இந்த உரையை அவர், நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிற நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா பற்றி விளக்குவதற்காக பயன்படுத்திக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                            மேலும்....

No comments:

Post a Comment