Monday 16 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (17-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,


வரிச்சலுகைகள்-புதிய வரிகள் இருக்குமா? 25-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக பட்ஜெட் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
சென்னை, மார்ச்.17-
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது.
2011-12-ம் ஆண்டுக் கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013- 14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம்
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
                                                                                                         மேலும்....

சென்னையில் பாலியல் பலாத்கார முயற்சியில் மாணவி கொலை: கொலையாளி தினேஷ் வெளிமாநிலத்திற்கு தப்பி ஓட்டம் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்

சென்னை, மார்ச்.17-
சென்னையில் பாலியல் பலாத்கார முயற்சியில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தினேசை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறும் நிலை உள்ளது. தினேஷ் வெளிமாநிலத்திற்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவி அருணா கொலை
சென்னை தலைமைச்செயலக காலனி, பராக்கா ரோட்டில் உள்ள வி.ஜே.அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கண்ணப்பன் வீட்டில் பயங்கர படுகொலைச் சம்பவம் கடந்த 9-ந் தேதி அன்று நடந்தது. அதிகாரி கண்ணப்பன் இருதய ஆபரேஷனுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் அவரது மகன் தினேஷ் மட்டும் தனியாக இருந்தார். தினேஷ் என்ஜினீயரிங் பட்டதாரி. தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
தினேஷ், சென்னை சூளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அருணாவை உயிருக்கு உயிராக காதலித்தார்.
                                                                                                               மேலும்....

தனியார் நிறுவனங்களுக்காக தமிழகத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லையா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை, மார்ச்.17-
தனியார் நிறுவனங்களுக்காக தமிழகத்தில் நிலங்கள் கையகப்படுத்தவில்லையா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் நில எடுப்பு திருத்த மசோதாவை இந்தியாவிலே உள்ள பெரும்பாலான கட்சிகளும், பா.ஜ.க.வின் கூட்டணியிலே உள்ள கட்சிகளும் தீவிரமாக எதிர்த்து வெளிநடப்பே செய்துள்ள நிலையில், அந்த மசோதாவை 2013-ல் கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க. தற்போது வலியச் சென்று ஆதரித்து வாக்களித்தது பற்றிய இரட்டை நிலையை விளக்கி நான் கொடுத்த அறிக்கைக்கு, ஜெயலலிதா மீண்டும் பதிலளித்திருக்கிறார்.
தனியார் நிலம்
தனியார் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை;
                                                                                                        மேலும்....

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு பாராளுமன்றம் நோக்கி காங்கிரசார் பேரணி நடத்தியதால் பரபரப்பு போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தி கலைத்தனர்

புதுடெல்லி, மார்ச்.17-
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய காங்கிரசார் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மசோதா நிறைவேற்றம்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில், ‘முக்கிய துறைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் அனுமதி பெற தேவையில்லை’ என்பது உள்ளிட்ட சில திருத்தங்களை சேர்த்து தற்போதைய பா.ஜனதா அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாராளுமன்றம் நோக்கி பேரணி
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
                                                                                                 மேலும்....

No comments:

Post a Comment