Friday 20 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (21-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் கடும் எதிர்ப்பு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டம் ரத்து ஆகிறது டெல்லி மேல்-சபையில் பெட்ரோலிய மந்திரி தகவல்

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி மேல்-சபையில் பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
புதுடெல்லி, மார்ச். 21-
தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
மீத்தேன் எரிவாயு திட்டம்
இதைத்தொடர்ந்து, இந்த எரிவாயுவை எடுத்து பயன்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, இதற்கான ஒப்பந்தத்தை ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்து ஆனது.
இதனால் அந்த நிறுவனம், அந்த திட்டம் தொடர்பான சில பூர்வாங்க பணிகளை தொடங்கியது.
                                                                                                        மேலும்....

சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராகிவிட்டார்கள் சென்னையில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு

சென்னை, மார்ச்.21-
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராகிவிட்டார்கள் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசினார்.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. தெற்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்தியமந்திரிகள் தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், பேராயர் எஸ்றா சற்குணம், தி.மு.க.தலைவர் கருணாநிதி மகன் மு.க. தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
                                                                                                            மேலும்....


சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பார் கவுன்சில் அலுவலகம் மீது செருப்பு-கற்கள் வீச்சு வக்கீல்கள் போராட்டத்தில் பெரும் பரபரப்பு

சென்னை, மார்ச்.21-
வக்கீல் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், பார் கவுன்சில் அலுவலகம் மீதும், போலீசார் மீதும் செருப்புகள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் எதிர்ப்பு
வக்கீல் எஸ்.பிரபாகரன் தலைமையிலான தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்துக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், கடந்த 8-ந்தேதி அங்கீகாரம் வழங்கியது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்துக்கு பார் கவுன்சில் வழங்கிய அங்கீகாரத்தை திரும்ப பெறவேண்டும். இந்த அங்கீகாரம் முறையற்ற வழிகளில் பெறப்பட்டுள்ளது என்று கூறி, பார் கவுன்சிலை பல முறை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கம்,
                                                                                                மேலும்....


உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து ரெயில் கவிழ்ந்து 38 பேர் பலி 150 பயணிகள் காயம்

ரேபரேலி, மார்ச்.21-
உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 38 பேர் பலி ஆனார்கள். மேலும் 150 பயணிகள் காயம் அடைந்தனர்.
ரெயில் தடம் புரண்டது
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள பச்ரவான் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9.10 மணிக்கு, அந்த ரெயில் திடீரென்று விபத்துக்கு உள்ளானது.
ரெயில் நிலையத்தை நெருங்கும்போது ரெயில் என்ஜினும், அதை அடுத்துள்ள 2 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன.
                                                                                                            மேலும்....

No comments:

Post a Comment