Friday 20 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு புதிய முயற்சி சோனியா உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
புதுடெல்லி, மார்ச்.20-
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தில், தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில திருத்தங்களை செய்து உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.
இந்த அவசர சட்டம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதியுடன் காலாவதி ஆகிறது.
                                                                                                                   மேலும்....

பீகார் மாநில எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விநோதம் மாணவர்கள் காப்பி அடிக்க ஜன்னல் மீது ஏறி ‘பிட்’ காகிதம் கொடுத்த பெற்றோர்

பாட்னா, மார்ச்.20-
நாளந்தா பல்கலைக்கழகத்தை பெற்ற பெருமைமிக்க மாநிலம் பீகார். ஒரு காலத்தில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு, அங்கு தற்போது நடந்து வரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறந்த உதாரணம் ஆகும்.
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
                                                                                                                        மேலும்....

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மச்சாவு: ‘சி.பி.ஐ. விசாரணை நடத்த தயார்’ மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.20-
கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிகுமார் மர்ம மரணத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்தத் தயார் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
மர்மச்சாவு
நேர்மையான அதிகாரி என்ற பெயர் எடுத்த கர்நாடக அரசின் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் டி.கே.ரவி (35 வயது), பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கடந்த 16-ந் தேதி தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அதை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக மாநில குற்றப்புலனாய்வுத்துறை (சி.ஐ.டி.) விசாரணைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் ரவியின் தந்தை கரியப்பா, தாயார் கவுரம்மா, சகோதரர் ரமேஷ் மற்றும் உறவினர்கள்,
                                                                                                              மேலும்....

மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குறிவைக்கும் குஷ்பு கட்சி மேலிடம் பரிசீலனை

சென்னை, மார்ச் 20–
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லெட்சுமி உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இதுவரை அவருக்கு கட்சி பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
அதே நேரத்தில் மக்களை கவரும் நட்சத்திர பேச்சாளராக குஷ்பு திகழ்வதால் கூட்டம் திரள்கிறது.
                                                                                                 மேலும்....

No comments:

Post a Comment