Friday 27 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (27-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (27-03-2015) காலை, IST- 10.30 மணி, நிலவரப்படி,

உன்னத மன்னருக்கு ஒர் பாரத ரத்னா வாஜ்பாய்க்கு குவியும் வாழ்த்துக்கள்

புதுடில்லி, மார்ச், 27,2015
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் இன்று பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதற்கென ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது இல்லத்திற்கு சென்று வழங்குகிறார். அவருடன் பிரதமர் மோடியும் செல்கிறார்.
இன்று வழங்கப்படும் பாரத ரத்னா இவரது சேவை மனப்பாண்மைக்கு கிடைத்த பரிசு என்று, இவருக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
                                                                                                     மேலும்....

கர்நாடக அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்: தமிழகத்தில் நாளை ரெயில்-சாலை மறியல் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு

சென்னை, மார்ச்.27-
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து, தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) ரெயில்-சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஆதரவு?
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் விவசாயிகள், அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு, வணிகர்கள், பஸ், லாரி உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள், சேவை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று(நேற்று) சந்தித்து வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
                                                                                        மேலும்....

காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
புதுடெல்லி, மார்ச்.27-
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத் தின் சில மாவட்டங் களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
                                                                                                       மேலும்....

ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பலி துணை விமானி, சதி செய்து விமானத்தை மலை மீது மோதவைத்தார் கருப்பு பெட்டி மூலம் வெளியான பரபரப்பு தகவல்


பாரீஸ், மார்ச்.27-
ஆல்ப்ஸ் மலையில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில், துணை விமானி சதி செய்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
விமான விபத்து
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு கடந்த 24-ந் தேதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் ஆல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51
                                                                                            மேலும்....

No comments:

Post a Comment