Tuesday 11 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது மத்திய அரசு அறிவிப்பு

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, நவம்பர், 12-11-2014,
கோவாவில், 45-வது சர்வதேச திரைப்பட விழா, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
75 நாடுகள்
இந்த விழா 11 நாட்கள் நடைபெறும். 75 நாடுகள், இதில் பங்கேற்கின்றன. ஆசிய நாடுகளின் 7 படங்களும், இதர நாடுகளின் 61 படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.
முதலாவது படமாக ஈரான் மொழிப்பட இயக்குனர் மோசன் மக்மல்பப் இயக்கிய ‘தி பிரசிடண்ட்’ என்ற படம் திரையிடப்படும்.
இந்த ஆண்டு மரணம் அடைந்த ஆலிவுட் பிரபலங்கள் ரிச்சர்டு அட்டன்பரோ, ராபி வில்லியம்ஸ் மற்றும் இந்திய திரையுலக பிரபலங்கள் ஜோரா சேகல், சுசித்ரா சென்,
                                                                                                    மேலும், . . . . . 

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுடெல்லி, நவம்பர், 12-11-2014,
நாடு முழுவதும் இன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊதிய உயர்வு
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்று கூறியது.
இதனால், 12-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி
வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்காக, நேற்று இந்தியன் வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் சார்பில் வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற
                                                                                                                       மேலும், . . .  . 

அண்ணாநகர் டாக்டர் வீட்டில் கொள்ளை அடித்த கொல்கத்தா கொள்ளையர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர் பரபரப்பான புதிய தகவல்கள்

சென்னை, நவம்பர், 12-11-2014,
சென்னை அண்ணாநகர் டாக்டர் வீட்டில் கொள்ளை அடித்த கொல்கத்தா கொள்ளைர்கள் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளை
சென்னை அண்ணாநகர் கிழக்கு, கியூ பிளாக், 15-வது தெருவைச்சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 61). டாக்டரான இவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலைபார்க்கிறார். கடந்த 4-ந் தேதி அன்று மாலையில் டாக்டர் ஆனந்தன் வீட்டில் அவரது மனைவி சாந்தி, தாயார் ஆண்டாள் மற்றும் வீட்டு வேலைக்காரப்பெண் மீனா என்ற அகீல்மாபீபி ஆகியோர் இருந்தனர்.
அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து, பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி, பெண்களை கட்டிப்போட்டு, 107 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றுவிட்டனர். இந்த கொள்ளைச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இந்தியில், வீட்டு வேலைக்காரி மீனாவுடன் பேசினார்கள்.
                                                                                                     மேலும், . . .  .

மாமனார் அவதூறாக பேசியதால் மகளை கொன்று தாய் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

கும்மிடிப்பூண்டி, நவம்பர், 12-11-2014,
மாமனார் அவதூறாக பேசியதால் மனம் உடைந்த இளம்பெண் மகளை கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
பாதுகாப்பு ஊழியர்
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள ஏரிப்பேட்டை சம்மந்தம் நகரை சேர்ந்தவர் மெவில்ஸ் (வயது 39). இவர் சென்னையில் தனியார் ஓட்டலில் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாதவி(30). இவர்களது மகள்கள் திரிஷா (11), ராகவிஸ்ரீ (5). நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மெவில்ஸ் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். காலையில் மூத்த மகள் திரிஷாவை பள்ளிக்கு அனுப்பி வைத்த மாதவி பின்னர் கதவை உள்பக்கமாக மூடி தாழ்பாள் போட்டு பூட்டிக்கொண்டார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பிய திரிஷா வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மெவில்ஸ் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருப்பதை அறிந்து அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகளும், மனைவியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடிதம் சிக்கியது
மாதவி தனது மாமனார் தூயமூர்த்திக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
                                                                                                மேலும், . .  . .

No comments:

Post a Comment