Friday 21 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2014) காலை, IST- 07.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் இருந்து சென்னை வந்த மீனவர்களை யார் அழைத்துச்செல்வது என்பதில் பிரச்சினை விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு


ஆலந்தூர், நவம்பர், 22-11-2014,
டெல்லியில் இருந்து சென்னை வந்த மீனவர் களை யார் அழைத்துச்செல்வது என்பதில் பிரச்சினை உருவானதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களை போதைப்பொருள் கடத்தியதாக கூறி கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுக்கு கொழும்பு ஐகோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.
இவர்களை விடுவிக்கக்கோரி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சே, 5 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, பொது மன்னிப்பு வழங்கினார். இதையடுத்து 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை வந்தனர்
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மாலை இலங்கையில் இருந்து டெல்லி வந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் வந்தனர். நள்ளிரவு 12.50 மணிக்கு 5 மீனவர்களையும் மத்திய அரசு அதிகாரி செல்வக்குமார் அழைத்து வந்தார்.
விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்க அமைச்சர்கள் பா.வளர்மதி, சுந்தர்ராஜன், ஜெயபால் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வந்து இருந்தனர்.
                                                                                                                மேலும், . . .  .

மாணவரை அடித்ததால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் 20 பேர் கைது; மாணவரின் தந்தையை கைது செய்ய நடவடிக்கை

சென்னை, நவம்பர், 22-11-2014,
சென்னையில் தனியார் பள்ளியில் மாணவரை அடித்த ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். வேலையாட்களை அனுப்பிய மாணவரின் தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆசிரியர் அடித்தார்
சென்னை, கோடம்பாக்கம், யுனெடெட் இந்தியா காலனி, 4-வது குறுக்குத்தெருவில் லயோலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பழமையான இந்த ஆண்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன. சுமார் 1,500 மாணவர்கள் படிக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் சாப்பாட்டு வேளை முடிந்தபிறகு, உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ், 8-ம் வகுப்பு மாணவர்களை உடற்பயிற்சிக்காக விசிலடித்து அழைத்தார்.
அப்போது அந்த வகுப்பு மாணவர் அர்னால்டும், பதிலுக்கு விசிலடித்து குறும்பில் ஈடுபட்டார். இதைப்பார்த்த ஆசிரியர் பாஸ்கர் ராஜ், மாணவர் அர்னால்டை தலையில் கொட்டியும், கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
                                                                                                  மேலும், . . . . 

சென்னை ஜெ.ஜெ.நகரில் தொடர் கொள்ளை கொள்ளையடித்த பண கட்டுகள் மீது படுத்து தூங்கியவர் கைது கூட்டாளியும் சிக்கினார்

அம்பத்தூர், நவம்பர், 22-11-2014,
சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பண கட்டுகளின் மீது படுத்து இருந்த போது வாலிபர் சிக்கினார்.
தொடர் கொள்ளை
சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் நகர் பகுதியில் இந்த ஆண்டு கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து உள்ளது. இதில் ஒரு சில குற்ற செயல்களில் ஈடுபட்ட திருடர்கள் சிக்கினாலும், தொடர்ந்து சங்கிலி தொடராக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் நூதன முறையில் கலக்கி வரும் கொள்ளையர்கள் போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்து வந்தனர்.
இதுபோன்ற கொள்ளையர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை பொறி வைத்து பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
                                                                                             மேலும், . . .  . . 

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகிறார் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற ஜனவரி மாதம் இந்தியா வருகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தின ராக அவர் கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி, நவம்பர், 22-11-2014,
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர், பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்து, அந்த நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.
அமெரிக்கா பயணம்
கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணம், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
                                                                                                  மேலும், . . .  . .

No comments:

Post a Comment