Saturday 22 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2014) காலை, IST- 07.30 மணி, நிலவரப்படி,

மே மாதம் நடந்த பயங்கர தாக்குதலில் துப்பு துலங்கியது சென்னை சென்டிரலில் குண்டு வைத்த 3 பேர் கைது கர்நாடகத்தில் பிடிபட்ட தீவிரவாதிகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள்

சென்னை சென்டிரலில் கடந்த மே மாதம் நடந்த குண்டு வெடிப்பில் துப்பு துலங்கியது. இது தொடர்பாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உப்பள்ளி(ஊப்ளி), நவம்பர், 23-11-2014,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு வாரத்தில் 3 நாட்கள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக் கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வழியாக சென்று வருகிறது.
                                                                                                   மேலும், . . . . . 

அனைவரையும் கைது செய்யக்கோரி நாளை போராட்டம்: ‘மேற்கு வங்காள அரசை கலைத்துப் பாருங்கள்’ மத்திய அரசுக்கு மம்தாபானர்ஜி சவால்

கொல்கத்தா, நவம்பர், 23-11-2014,
முடிந்தால் மேற்கு வங்காள மாநில அரசை கலைத்துப் பாருங்கள் என்று மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சவால் விடுத்தார். தங்கள் அனைவரையும் கைது செய்யக் கோரி நாளை போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கோபம்
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு சாரதா சீட்டு நிறுவனத்தினர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் கூறப்பட்டு சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதில் ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஸ்ரீன்ஜாய் போஸ் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.
இது மம்தா பானர்ஜிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மத்திய அரசு மீதும் பிரதமர் நரேந்திரமோடி மீதும் தனது கோபத்தை கொட்டித் தீர்த்தார்.
                                                                                                                   மேலும், . .  . . 

சட்டமன்ற கூட்டத்தை எப்போது கூட்டுவது என்று எங்களுக்கு தெரியும் முதல்-அமைச்சர் அறிக்கை

சென்னை, நவம்பர், 23-11-2014,
சட்டமன்ற கூட்டம் எப்போது கூட்டப்படவேண்டும்? என்று எங்களுக்கு தெரியும் என தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவை
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் “சட்டப்பேரவையை கூட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது” என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி “சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
                                                                                                    மேலும், . . . . 

காஷ்மீர் மக்களின் விதியை மாற்றவேண்டும் என்பதே எனது கனவு தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேச்சு

கிஷ்த்வார், நவம்பர், 23-11-2014,
ஜம்மு காஷ்மீர் மக்களின் விதியை மாற்ற வேண்டும் என்பதே எனது கனவாகும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
சட்டசபை தேர்தல்
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கிஷ்த்வார் நகரில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:-
                                                                                                  மேலும், . . . . .

No comments:

Post a Comment