Wednesday 9 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

வதோதரா தொகுதியில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று நரேந்திரமோடி வேட்புமனு தாக்கல் டீ கடைக்காரர் வழிமொழிந்தார்
வதோதரா, ஏப்ரல், 10-04-2014,
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை டீ கடைக்காரர் வழிமொழிந்தார்.
உற்சாக வரவேற்பு
பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்றுதான் கடைசி நாள் ஆகும். இதையொட்டி மனுதாக்கல் செய்வதற்காக நரேந்திரமோடி நேற்று காலை வதோதரா நகருக்கு
                                                                                       மேலும், . . . 

தமிழ்நாடு, புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 40 தொகுதிகளில் 875 பேர் போட்டி, வட சென்னை - 40, தென் சென்னை - 42, மத்திய சென்னை - 20
சென்னை, ஏப்ரல், 10-04-2014,
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 29–ந்தேதி தொடங்கி கடந்த 5–ந்தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் 1,256 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7–ந்தேதி நடந்தது. அப்போது 348 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். நேற்று சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
875 பேர் போட்டி
அதன்பிறகு இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 789 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். புதுச்சேரி தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று மாலை வெளியிட்டார்.
தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
                                                                        மேலும், . . . 

அனைத்து அவலநிலைகளையும் தீர்க்கும் மாயாஜாலக்காரரா, நரேந்திரமோடி? சோனியா காந்தி கேள்வி

கோலார், ஏப்ரல், 10-04-2014,
உண்மையான முகம், முகமூடியால் மறைக்கப்பட்டிருக்க, நாட்டின் அனைத்து அவலநிலைகளையும் தீர்க்கும் மாயாஜாலக்காரர் போல மோடியை சித்தரிக்கின்றனர் என்று சோனியாகாந்தி குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் பிரசாரம்
கர்நாடக மாநிலம் கோலாரில், மத்திய மந்திரி கே.எச்.முனியப்பாவை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார். அப்போது, பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை பெயர் குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:–
                                                                            மேலும், . . 

No comments:

Post a Comment