Tuesday 15 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காவிரி நீர் பிரச்சினையில் துரோகம் செய்தது யார்? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால்

ஆரணி, 16-04-2014,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று, ஆரணி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அதே தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து, வடதண்டலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மின்சார பற்றாக்குறை

கடந்த ஆண்டு 2013-ல் ஜூலை மாதம் முதல் அக்டோபர் 15ந்தேதி வரை மின்வெட்டு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவியது. இதனை, நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது பெருமையாக கூறினேன். இவ்வாறு நான் சொன்னவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு சொல்லி வைத்தாற் போல் திடீர் என ஒரே சமயத்தில் குறைந்தது.


                                                                                                                                         மேலும், . . .

நாட்டின் பரிதாப நிலைக்கு சோனியா, ராகுல் தான் காரணம் நரேந்திரமோடி குற்றச்சாட்டு

ஹசாரிபாக், 16-04-2014,

நாட்டின் பரிதாப நிலைக்கு சோனியா, ராகுல் ஆகியோர் தான் காரணம் என்று நரேந்திரமோடி குற்றம் சாட்டினார்.

ராகுலுக்கு பதிலடி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மராட்டிய மாநிலம், லாத்தூரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “குஜராத் ‘மாதிரி’ அரசு பற்றி நரேந்திரமோடி பேசி வருகிறார். குஜராத் ‘மாதிரி’, ‘டாபி’ (இனிப்பு மிட்டாய்) மாதிரி ஆகும். அவுரங்காபாத் நகரம் மாதிரி ஒரு நிலத்தை ‘டாபி’யை பார்சல் செய்து கொடுத்ததுபோல தொழில் அதிபர் அதானிக்கு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற விலையில் மோடி கொடுத்துள்ளார். எனவே ‘குஜராத் மாதிரி’ என்பது ‘டாபி மாதிரி’ என விமர்சித்தார்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நரேந்திரமோடி, ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

சிறுபிள்ளைத்தனம்

அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                     மேலும், . . .                

ஒன்றிய கவுன்சிலர் படுகொலை கொலை முயற்சியில் 4 முறை தப்பியவரை வெட்டி சாய்த்தனர்


மதுரை, 16-04-2014,

பசுபாண்டியன் கொலையில் முக்கிய குற்றவாளியான, ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் மதுரை அழகர்கோவில் முன்பு ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே 4 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் ஆவார்.

முக்கிய குற்றவாளி

திண்டுக்கல் மாவட்டம் கரட்டழகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது 37). திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 10–1–2012 அன்று திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டியில், தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
                                                                                                                மேலும், . . .  

பாளையங்கோட்டையில் கணவர் வீட்டு முன் இளம்பெண் போராட்டம்

நெல்லை, 16-04-2014,

பாளையங்கோட்டையில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, அவரது வீட்டு முன் இளம்பெண் நேற்று போராட்டம் நடத்தினார்.

மதபோதகர்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஆசீர்வாத தெருவை சேர்ந்தவர் வினோத்ஜேம்ஸ் (வயது 39). அவருடைய மனைவி எஸ்தர் ராணி (35). இவர்களுக்கு பெஞ்சமின் சவேரியார் (10) என்ற மகன் உள்ளான். 5–ம் வகுப்பு படித்து வருகிறான். வினோத் ஜேம்ஸ் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எஸ்தர்ராணி ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய மகனையும் அழைத்து சென்று விட்டார்.
                                                                                                                               மேலும், . . .

No comments:

Post a Comment