Monday 14 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-04-2014)

 இன்றைய முக்கிய செய்திகள் (15-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் சோனியாகாந்தி, நரேந்திரமோடி நாளை வாக்கு சேகரிக்கிறார்கள்

சென்னை, 15-04-2014,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
5 முனைப்போட்டி
தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்த பாராளுமன்ற தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும், தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டும் தேர்தலை சந்திக்கின்றன.

                                                                                                   மேலும், . . . 

இந்திய அரசியல் சாசன சிற்பியான அம்பேத்கரை காங்கிரஸ் அவமதிக்கிறது பிறந்த தினவிழாவில் நரேந்திரமோடி குற்றச்சாட்டு
ஆமதாபாத், 15-04-2014,
இந்திய அரசியல் சாசன சிற்பியான அம்பேத்கரை காங்கிரஸ் அவமதிப்பதாக, அவரது பிறந்த தின விழாவில் பேசிய நரேந்திமோடி குற்றம் சாட்டினார்.
அம்பேத்கார் பிறந்த தினம்
இந்திய அரசியல் சாசனத்தை இயற்றிய தலைமை சிற்பியான அம்பேத்கரின் 123–வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்திநகரில் நடந்த அம்பேத்கார் பிறந்த தினக்கொண்டாட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                மேலும், . . .  


சங்கரன்கோவில் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு


நெல்லை, 15-04-2014,
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் ‘ரோபோ‘ கருவி உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டான். 6 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.
3 வயது சிறுவன்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கணேசன். சங்கரன்கோவில் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஹர்சன் (வயது 3) என்ற மகனும், வைஷ்ணவி (1) என்ற மகளும் உள்ளனர்.

குத்தாலப்பேரி ஊருக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், ஆசிரியர் கணேசனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு தென்னை, எலுமிச்சை பயிரிட்டுள்ளார்.
                                                                                             மேலும், . . . .

No comments:

Post a Comment