இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,
கரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு காவிரி பிரச்சினையில் இரு கட்சிகளும் தமிழக மக்களை வஞ்சிக்கின்றன
ராயனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும், . . .
தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள் மோடி விளாசல்
''அவர்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் புதிதாக உருவாகி உள்ள, மூன்றாவது சக்தி தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
மேலும், . . .
சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் நரேந்திரமோடி சந்திப்பு
நரேந்திரமோடி வருகை
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல் மந்திரியுமான நரேந்திர மோடி நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார்.
பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக அவர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசப் போவதாக பா.ஜ.க. சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், . . . .
கரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு காவிரி பிரச்சினையில் இரு கட்சிகளும் தமிழக மக்களை வஞ்சிக்கின்றன
கரூர், 14-04-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று, கரூர் தொகுதியில்
போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரையை ஆதரித்து
தேர்தல் பிரசாரம் செய்தார்.ராயனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும், . . .
தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள் மோடி விளாசல்
சென்னை, 14-04-2014,
''தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் நடுவில் தமிழக
மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது
அக்கறை செலுத்தவும், இந்த இருகட்சிகளும் நினைப்பது இல்லை. ''அவர்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் புதிதாக உருவாகி உள்ள, மூன்றாவது சக்தி தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
மேலும், . . .
சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் நரேந்திரமோடி சந்திப்பு
சென்னை, 14-04-2014,
சென்னை வந்த நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்தை அவரது
இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடம் நடந்தது.
வெளியே வந்த அவர் இன்று தமிழ் புத்தாண்டை யொட்டி தமிழக மக்களுக்கு
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.நரேந்திரமோடி வருகை
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல் மந்திரியுமான நரேந்திர மோடி நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார்.
பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக அவர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசப் போவதாக பா.ஜ.க. சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், . . . .
No comments:
Post a Comment