Thursday 6 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-02-2014) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,

புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் சட்டசபை மீண்டும் கூடுகிறது 13–ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை, பிப்ரவரி, 07-02-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.
எனவே 2011–12–ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்தது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
அதன் பின்னர் 2012–13, 2013–14ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது 4–ம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2014–15–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
                                                                                         மேலும், . . . 

நரேந்திரமோடியை டீ வியாபாரி என்பதா? எதிர்க்கட்சியினரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடெல்லி, பிப்ரவரி, 07-02-2014,
எதிர்க்கட்சியினரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது என்று கட்சி செய்தி தொடர்பாளர்களுக்கு ராகுல் காந்தி ஆலோசனை வழங்கினார்.
ராகுல் ஆலோசனை
சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர் டீ வியாபாரி என்று கூறியிருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கட்சி செய்தி தொடர்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் எப்படி சிறந்த முறையில் நாட்டு மக்களுக்கு காங்கிரசின் செயல்திட்டங்களை சொல்ல வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
                                                                                                      மேலும், . . . . 

சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும் அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை
சென்னை, பிப்ரவரி, 07-02-2014,
ஏ.டி.எம்.வசதி உள்பட சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் தொழிலாளர்கள் கருத்தரங்கம்
இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் செயலாளர் கே.கலைவாணி பேசியதாவது:–

                                                                                                                                மேலும், . . 

No comments:

Post a Comment