Tuesday 11 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயித்ததில் முறைகேடு புகார் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி மீது வழக்கு டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் நடவடிக்கை
புதுடெல்லி, பிப்ரவரி, 12-02-2014,
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கிருஷ்ணா, கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து மத்திய அரசுக்கு சப்ளை செய்கிற இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்வதில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது.இது தொடர்பாக மத்திய மந்திரிசபை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் தஹிலியானி, மூத்த வக்கீல் காமினி ஜெய்ஸ்வால், மத்திய அரசு துறையின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா ஆகியோர் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளித்துள்ளனர்.
                                                                                                                   மேலும், . . .

3–வது அணி என்பது காங்கிரசை காப்பாற்றும் வேலை நரேந்திரமோடி பேச்சு
புவனேஸ்வர், பிப்ரவரி, 12-02-2014,
3–வது அணி என்பது காங்கிரசை காப்பாற்றும் வேலை என்று நரேந்திரமோடி கூறினார்.
மோடி பிரசாரம்
பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டணி கட்சியான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. புவனேசுவரத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:–உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகள், ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் போன்ற மூன்றாவது அணியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அவர்கள் ஆட்சி செய்யும் அல்லது ஆட்சி செய்த மாநிலங்களை அழித்து வருகிறார்கள்.
                                                                               மேலும், . . . 

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் வரி இல்லாத பட்ஜெட்டாக இருக்குமா? நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
சென்னை, பிப்ரவரி, 12-02-2014,
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (13–ந்தேதி) தாக்கல் செய்கிறார்.
இந்த அரசின் 4–ம் பட்ஜெட்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011–12–ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2012–13, 2013–14–ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுவரை மூன்று பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2014–15–ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
                                                                                               மேலும், . . . 

No comments:

Post a Comment