Saturday 22 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,



பூமியில் எந்த சக்தியாலும் அருணாசலபிரதேசத்தை பறிக்க முடியாது நரேந்திர மோடி ஆவேசம்
இடாநகர், பிப்ரவரி, 23-02-2014,
பூமியில் எந்த சக்தியாலும் அருணாசலபிரதேசத்தை இந்தியாவிடம் இருந்து பறிக்க முடியாது, சீனா தனது குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நரேந்திர மோடி கூறினார்.
பறிக்க முடியாது
அருணாசலபிரதேசத்தில் பாசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:–
                                                                                          மேலும், . . . .

இந்தியா முழுவதும் போராட்டம் சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் 25–ந் தேதி முதல் வேலை நிறுத்தம் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து
புதுடெல்லி, பிப்ரவரி, 23-02-2014,
சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒரே சீரான விலை
அகில இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்திர பிரகாஷ், இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பவன் சோனி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் சங்கத்தின் கோரிக்கை பற்றி கூறியதாவது:–
மானிய விலை சிலிண்டருக்கு ரூ.450 வரையும், மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கு ரூ.1,275 வரையும், 19 கிலோ வர்த்தக உபயோக சிலிண்டர்களுக்கு ரூ.1,900 வரையும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற சமச்சீரற்ற விலை நிர்ணயமே, கியாஸ் வினியோகத்தில் முறைகேடுகளுக்கு வழிகோலுகிறது. ஆனால், அதற்கு வினியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல.
                                                                                             மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தல் தேதி 2 வாரத்தில் வெளியாகும் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த பரிசீலனை
புதுடெல்லி, பிப்ரவரி, 23-02-2014,
பாராளுமன்ற தேர்தல் தேதி 2 வாரத்தில் வெளியாகும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல்
நடப்பு 15–வது பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மே 31–ந் தேதி முடிகிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் மத்தியில் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.
இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்டு, இறுதி செய்யப்பட்டு விட்டன. புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியும் முடிந்துள்ளது.
                                                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment