Saturday 8 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

ஹார்வர்டு பல்கலைக்கழகம் உதவாது பொருளாதார வளர்ச்சிக்கு கடின உழைப்பு தான் தேவை ப.சிதம்பரம் மீது நரேந்திர மோடி தாக்கு
சென்னை, பிப்ரவரி, 09-02-2014,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் தேவை இல்லை. கடின உழைப்பு தான் தேவை என்று ப.சிதம்பரம் மீது நரேந்திர மோடி தாக்குதல் தொடுத்தார்.
ப.சிதம்பரம் மீது தாக்குதல்
வண்டலூரில் நடந்த பாரதீய ஜனதா பொதுக் கூட்டத்தில் இதுபற்றி நரேந்திர மோடி பேசியதாவது:–
மத்திய அரசில் தேர்தலில் தோற்று, மறு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற ஒருவர் மந்திரியாக இருக்கிறார். அவர் என்னைப் பற்றி மிக மோசமாக பேசி வருகிறார். நான் மவுனமாக இருப்பது சேறு எவ்வளவு உயரத்துக்கு வந்தாலும், அதற்கு மேல் தாமரை வரும் என்பதால் தான்.
                                                                                                                  மேலும், . . .

கெஜ்ரிவால் ‘திடீர்’ மிரட்டல் ‘‘ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன்’’
புதுடெல்லி, பிப்ரவரி, 09-02-2014,
ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜனலோக்பால் மசோதா
டெல்லி சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, முதல்–மந்திரி முதல் அடிமட்ட ஊழியர்வரை யார் ஊழல் செய்தாலும், அவர்களுக்கு ஆயுள்தண்டனை வரை விதிக்க வகைசெய்து ஜனலோக்பால் சட்டம் கொண்டு வர முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார்.
                                                                                                            மேலும், . . . 

மகளை காதலித்த வாலிபரை வரவழைத்து கொன்ற கொடூரம் கல்லூரி மாணவியின் தந்தை வெறிச்செயல்

தூத்துக்குடி, பிப்ரவரி, 09-02-2014,
மகளை காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைப்பதாக ஏமாற்றி அழைத்து கொடூரமாக ஒருவர் கொலை செய்து இருக்கிறார்.
சினிமாபட பாணியில் நடந்த இந்த கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கல்லூரி மாணவி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. அவருடைய மகள் கவிதா (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
                                                                                            மேலும், . . . . . .

No comments:

Post a Comment