Tuesday 25 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

பெண் என்ஜினீயர் கொலையில் மேற்குவங்காள வாலிபர்கள் கைது பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக வாக்குமூலம்
சென்னை, பிப்ரவரி, 26-02-2014,
சென்னை கேளம்பாக்கம் சிறுசேரியில் பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கொடூர கொலையாளிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பெண் என்ஜினீயர் கொலை
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார்.
கடந்த 13–ந்தேதி அன்று இரவு காணாமல் போன இவர், கடந்த 22–ந்தேதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதனால் உமாமகேஸ்வரி கற்பழித்து, கழுத்தறுத்து, குத்தி கொலைச்செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தையே உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்து டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பாளர்

                                                                                                             மேலும், . . . .

இடதுசாரிகள், அ.தி.மு.க. உள்பட 11 கட்சிகள் இணைந்து காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக புதிய அணி உதயம் பிரதமர் யார் என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும்
புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2014,
இடதுசாரிகள், அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து, காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தால், பிரதமர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
11 கட்சிகள் ஆலோசனை
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் மாற்றாக, இடது சாரிகள் மற்றும் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகளும் இணைந்து புதிய அணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
                                                                                                      மேலும், . . .

‘‘தவறு நடந்திருந்தால் மன்னித்து, ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ முஸ்லிம்களுக்கு பாரதீய ஜனதா வேண்டுகோள்
புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2014,
எங்காவது தவறு நடந்திருந்தால், அதற்காக மன்னித்து, மத்தியில் ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று முஸ்லிம் மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் விரோத கட்சி அல்ல
பாராளுமன்றத் தேர்தலையொட்டி, நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைக்க 272–க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற குறி வைத்து பாரதீய ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. இதில் முஸ்லிம் மக்களின் பங்கு தொடர்பாக டெல்லியில் பாரதீய ஜனதா சார்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரதீய ஜனதா, முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. எங்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை நம்பிப் போகாதீர்கள். இந்த முறை நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.
                                                                                                               மேலும், . . 

No comments:

Post a Comment