Wednesday 26 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-02-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

 பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 14 'சீட்!' கந்தன் கோவிலில் கிருஷ்ணன் பிரார்த்தனை
சென்னை, 27-02-2014,
பா.ஜ., - தே.மு.தி.க., பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. 18 தொகுதி கள் கேட்ட, தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ., அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், கூட்டணி முடிவை, அதிகாரப்பூர்வமாக இன்று, தே.மு.தி.க., அறிவிக்கலாம் என, பா.ஜ., வட்டாரம் நம்பிக்கை தெரிவித்தது.
கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்து, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருச்செந்தூர் சென்று, முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். இந்த கூட்டணிக்கு, காரணகர்த்தாவாக செயல்பட்ட, காந்திய மக்கள் கட்சி தலைவர், தமிழருவி மணியன், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு உள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், அவரது மைத்துனர், சுதீஷுடன், பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்திய பேச்சில், பா.ஜ., தரப்பில், 'தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது' என்பதை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். அதை ஏற்று, கூட்டணி முடிவை அறிவிக்கும்படியும், பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
                                                                                                    மேலும்,. . . 

முதல்–அமைச்சரின் 66–வது பிறந்தநாள் பரிசளிப்பு விழா
இந்தியாவை வல்லரசாக்கும் வல்லமை படைத்தவர்

ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை, 27-02-2014,
இந்தியாவை வல்லரசாக்கும் வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
விளையாட்டு போட்டிகள்– மருத்துவ முகாம்கள்
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை நகரில் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்பவர்கள் அழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர். மேலும் முதல்–அமைச்சர் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
பரிசு வழங்கல்
இந்த விழாவுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி, சிறுபான்மையினர் துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
                                                                                                                     மேலும், . . .

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை ஆவதில் சிக்கல் ஏன்? கருணாநிதி பதில்
சென்னை, 27-02-2014,
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை ஆவதில் சிக்கல் ஏன்? என்பது குறித்து கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வளர்ச்சி திட்டங்கள்
கேள்வி:–தேர்தல் கமிஷன் இன்னும் தேர்தலுக்கான தேதியைக்கூட அறிவிக்கவில்லை; ஆனால் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா அவசர அவசரமாக நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதின் காரணம் என்ன?
                                                                         மேலும், . . . 

No comments:

Post a Comment