Monday 24 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

நரேந்திரமோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு ‘‘பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றக்கூட போர் தொடுத்தது இல்லை’’
பீஜிங், பிப்ரவரி, 25-02-2014,
அருணாசலபிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக சீனா மீது நரேந்திரமோடி கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. ‘பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றக்கூட போரிட்டது இல்லை’ என்று அந்நாடு கூறியுள்ளது.
குற்றச்சாட்டு
குஜராத் மாநில முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அம்மாநிலத்தை கைப்பற்றத் துடிக்கும் சீனாவை எச்சரித்தார்.
நாட்டின் எல்லையை விஸ்தரிக்கும் குணத்தை சீனா கைவிட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

                                                                                                             மேலும், . .. 

வெடிபொருள் பதுக்கிய வழக்கு பறவை பாதுஷாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி நெல்லை கோர்ட்டு உத்தரவு

நெல்லை, பிப்ரவரி, 25-02-2014,
வெடிப்பொருள் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பறவை பாதுஷாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நெல்லை கோர்ட்டு அனுமதி வழங்கியது.
பறவை பாதுஷா
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27–ந்தேதி மேலப்பாளையம் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது 2 பேர் வெடி பொருட்களுடன் சிக்கினார்கள்.
                                                                                    மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா வெளியிட்டார்
சென்னை, பிப்ரவரி, 25-02-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 66–வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் பிறந்தநாள் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 12.30 மணிக்கு வந்தார்.
அங்கு அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment