Wednesday 19 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

‘‘பிரதமராக இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?’’ ராகுல் காந்தி வருத்தம்
புதுடெல்லி, பிப்ரவரி, 20-02-2014,
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலையாவது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இந்த நாட்டில் பிரதமராக இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்று வருத்தத்துடன் கூறினார்.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நேற்று முன்தினம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் கூறியது.
                                                                          மேலும், . . .
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7-பேரும் 3-நாளில் விடுதலை சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, பிப்ரவரி, 20-02-2014,
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை படித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது,படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
                                                                                                 மேலும், . . .

ராகுல்காந்தி மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் வருகை கருணாநிதியை சந்திக்கவும் வாய்ப்பு
சென்னை, பிப்ரவரி, 20-02-2014,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்தி மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பாத யாத்திரையில் அவர் பங்கேற்கிறார். மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பாத யாத்திரை
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதில், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்று வருகிறார்.
                                                                                                               மேலும், . . .

No comments:

Post a Comment