Friday 11 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-07-2014) மாலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மோடிக்கு ஒபாமா அழைப்பு: முறைப்படி கடிதம் கொடுத்தார் அமெரிக்க மந்திரி
புதுடெல்லி, ஜூலை, 11-07-2014
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது. ஆனால், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமர் ஆனபிறகு அவரை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அவருக்கு ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை துணை மந்திரி வில்லியம் பர்ன்ஸ் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
                                                                                                           மேலும், . . . 

சுஷ்மா சுவராஜுடன் பெரிஸ் சந்திப்பு: இலங்கைக்கு வரும்படி அழைப்பு


புதுடெல்லி, ஜூலை, 11-07-2014
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிஸ், டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் அளித்த பேட்டி வருமாறு:-
                                                                                                                 மேலும், . . .

சுப்ரீட் கோர்ட் நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
புதுடெல்லி, ஜூலை, 11-07-2014
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பாக கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா காலாவதியாகிவிட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி சதாசிவத்திடம் இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை
                                                                                                              மேலும், . . . 

தர்மபுரியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


தர்மபுரி, ஜூலை, 11-07-2014
கடந்த ஆண்டு தர்மபுரியில் திவ்யாவை காதலித்து இளவரசன் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜாதிக்கலவரம் ஏற்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டன. பின்னர் இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த வாரம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது சிலர் ஆயுத பயிற்சி பெற்று வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக கூறி தர்மபுரி
                                                                                                       மேலும், . . .

No comments:

Post a Comment