Tuesday 29 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-07-2014) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் துப்பாக்கி முனையில் 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

புதுடெல்லி, 29-07-2014,
டெல்லியில் துப்பாக்கி முனையில் 10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. உத்தம் நகரை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவியை மாணவியை 5 பேர் கொண்ட கும்பல், சுரேந்தர் என்பவரது வீட்டிற்கு கொண்டு சென்று, துப்பாக்கி முனையில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 19ம் தேதி நடந்ததுள்ளது.
மாணவியை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அந்த கும்பல் செல்போனில் படம் பிடித்துள்ளது.
                                                                                                     மேலும், . . . . .

உலக அளவில் உ.பி.யில்தான் மதகலவரத்தால் பலியானோர் அதிகம் அமெரிக்கா அறிக்கை
லக்னோ, 29-07-2014,
உலக அளவில் மதக் கலவரம் காரணமாக உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவில் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு இலாகா ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகள், படுகொலைகள் குறித்து சர்வதேச மதச் சுதந்திரம் என்ற பெயரில் அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிடுவது வழக்கம்.
2013ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி அண்மையில் வெளியிட்டார்.
                                                                                                       மேலும், . . . .

அரசு நிலத்தை "பிளாட்' போட்ட பஞ்சாயத்து தலைவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல், 29-07-2014,
சிவியாம்பாளையம் பஞ்சாயத்து எல்லையில், அரசுக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க., பஞ்சாயத்து தலைவர், 25 பேருக்கு பிளாட் போட்டு விற்றது, போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் அடுத்த, சிவியாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, 45, இவர், அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர் பதவியில் உள்ளார். சிவியாம்பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள், சில நாட்களுக்கு முன், மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், "சிவியாம்பாளையம் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எட்டு ஏக்கர் பரப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, 25 பேருக்கு,
                                                                                                            மேலும், . . . . .

1ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிரியர்கள் கைது

பெங்களூர், 29-07-2014,
பெங்களூரில் 1ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் வர்த்தூர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட குன்டதஹள்ளி கேட் அருகே வர்த்தூர்–ஹரலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 1–ம் வகுப்பு படித்த மாணவிக்கு கடந்த 12–ந் தேதி நேகாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
                                                                                                 மேலும், . . . . . .

No comments:

Post a Comment