Friday 25 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

கார்கில் போர் 15-வது நினைவு தினம் ராணுவ தளபதி விக்ரம் சிங் அஞ்சலி செலுத்தினார்

புதுடெல்லி, 25-07-2014,
கடந்த 1999-ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனிசிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. அப்போது இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது.
இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற 15-வது ஆண்டு
                                                                                                 மேலும், . . .

21 மாவட்டங்களில் புதிய மன நல மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, 25-07-2014,
சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும் எண்ணற்ற பல சீரிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கீழ்க்காணும் திட்டங்களை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது அரசின் நிதியுதவியுடன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் திருவள்ளூர், கடலூர்,
                                                                                                              மேலும், . . . 

சிவில் சர்வீஸ் திறனாய்வுத் தேர்வு பாராளுமன்றத்தில் அமளி அரசு பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
புதுடெல்லி, 25-07-2014,
சிவில் சர்வீஸ் திறனாய்வுத் தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் எழுந்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில், திறனாய்வு முறையை கைவிடக்கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
                                                                                                      மேலும், . . . .

அனல் மின் நிலையத்தில் அலகுகள் "அவுட்' தென் மாவட்ட மின் தடை அபாயம்
தூத்துக்குடி, 25-07-2014,
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 வது, 3 வது அலகுகளில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 வது அலகு பராமரிப்புக்கு எடுக்கப்பட்டுள்ளதால், மூன்று அலகுகளில் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடியில் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு ஐந்து அலகுகளில் இருந்தும் ஒரு அலகில் இருந்து 210 மெகாவாட் வீதம், மொத்தமாக
                                                                                                        மேலும், . . . 

No comments:

Post a Comment