Monday 14 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

பாராளுமன்ற துளிகள்
புதுடெல்லி, 14-07-2014,
அறிக்கை தயாராகவில்லை...
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி பற்றி ஆய்வு செய்ய ஏ.கே.அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தயாரித்துள்ள அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாக சில தகவல்கள் இன்று வெளியானது.
அதை ஏ.கே.அந்தோணி மறுத்தார். அறிக்கை இன்னமும் தயாராகவில்லை. அதற்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மன்மோகன்- ஜேட்லி சந்திப்பு
காங்கிரஸ் படுதோல்வியை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் அமைதியாக குடியேறி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி திடீரென மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்றார்.
                                                                                                          மேலும், . . . 

தீ விபத்தில் கட்டிடம் சேதம்: ஸ்டேட் வங்கின் 3 கிளைகள் வேறு இடத்திற்கு மாற்றம்


சென்னை, ஜூலை.14–
சென்னை பாரிமுனையில் இயங்கி வந்த ஸ்டேட் வங்கி பிரதான கிளை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கி பணம், வாடிக்கையாளர் நகை மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தீக்கு இறையாகாமல் தப்பின. அங்கிருந்த பணம், மற்றும் நகைகள் மற்ற கிளைகளுக்கு மாற்றப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்து உள்ள இடத்தில் 3 கிளைகள் இருந்து உள்ளது. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்களுடைய நகைகள், ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரதாப்ராவ் சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
                                                                             மேலும், . . . .

வேட்டிக்கு தடையால் குமுறும் தமிழகம்
சென்னை, 14-07-2014,
சென்னை கிரிக்கெட் கிளப்புக்குள் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டி வந்ததால் ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் 2 வக்கீல்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் கிரிக்கெட்டில் விளாசப்படும் சிக்சர்களை போல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறது.
வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு மல்லு கட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தயாராகி விட்டன.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் இன்று சட்டசபையில் பிரச்சினையை கிளப்புவேன் என்று ஆவேசத்துடன் சென்றுள்ளார்.
இது ஒரு கலாச்சார தாக்குதல்! மேலை நாகரீகம்தான் உயர்வானது என்ற எண்ணத்தை தக்க வைக்கும் முயற்சி என்று தமிழர்கள் குமுறுகிறார்கள்.
                                                                                                   மேலும், . . . .

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மணி விழா: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜூலை. 14–
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் 60–வது மணிவிழா இன்று கொண்டாடப்பட்டது. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மணி விழாவையொட்டி இன்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள். பலர் மணிவிழாவில் பங்கேற்று அவர்களிடம் ஆசி பெற்றனர்.
தினத்தந்தி அதிபர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, ராம்கி, நடிகை நிரோஷா, சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கருநாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் சுந்தரேசன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் நேரில் பங்கேற்றனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், ஜே.எம்.ஆரூண், நடிகர் சத்யராஜ் ஆகியோர் போனில் வாழ்த்து கூறினர்.
                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment