Monday 28 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-07-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

அசோக் சவானுக்கு தேர்தல் கமிஷன் அளித்த விளக்க நோட்டீசுக்கு ஐகோர்ட்டு தடை

புதுடெல்லி, 28-07-2014,
சட்டமன்ற தேர்தலின் போது பணம் கொடுத்து செய்தி வெளியிட்டது தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய விளக்க நோட்டீசுக்கு டெல்லி கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேர்தல் கமிஷனில் புகார்
மராட்டியத்தில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்–மந்திரி அசோக் சவான் நந்தேத் மாவட்டத்தில் உள்ள போகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலின் போது சில பத்திரிகைகளில் கட்டுரைகள் போல தோற்றமளித்த விளம்பரங்களை அசோக் சவான் பெருத்த செலவில் வெளியிட்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, ‘இந்த செய்திகளுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்த கணக்கு அறிக்கையில் சவான் குறிப்பிடவில்லை’ என்று,
                                                                                                 மேலும், . . . . 

லிபியாவில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் சண்டை; 59 பேர் பலி


பெங்காசி, 28-07-2014,
லிபியாவில் தீவிரவாதிள் ராணுவம் இடையிலான கடும் சண்டையில் 59 பேர் பலியாகினர்.
லிபியாவில் 34 ஆண்டுகால கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. திரிபோலி விமானநிலையம் ஜிண்டான் போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் ஈருந்து வருகிறது. இதனால் இந்த விமானநிலையம் மீது இஸ்லாமிய போராட்டக்குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் பெங்காசி நகரின் மீதும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் பெங்காசி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
                                                                                                       மேலும், . . . . .
காஸாவில் உடனடி போரை நிறுத்த வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

காஸா சிட்டி, 28-07-2014,
காஸாவில் உடனடி போரை நிறுத்த வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்–காஸாமுனை ஹமாஸ் இயக்கத்தினர் இடையே கடந்த 8–ந் தேதி சண்டை தொடங்கியது. இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாமுனையில் குண்டு மழை பொழிய,
                                                                                                        மேலும், . . . .

நாளை ரம்ஜான்: கருணாநிதி–தலைவர்கள் வாழ்த்து

சென்னை, 28-07-2014,
ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:–
இஸ்லாமிய மக்களின் புனித நூலான ‘‘திருக்குர்ஆன்’’ நூல் அருளப்பட்ட ரமலான் மாதம் முழுவதும் உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல், பசித் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அன்றாடம் உரிய பணிகளை ஆற்றி, நோன்புக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மனநிறைவோடு ரமலான் திருநாளைக் கொண்டாடும் எனதருமை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
இஸ்லாம் நெறி வளர்த்த அண்ணல் நபிகள் நாயகம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வாழ்வியல் முறைகளையே போதித்தார். ‘‘தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள், அவ்வாறே உறவினர்களிடமும் அண்டை வீடுகளில் உள்ள அந்நியரிடமும், ஆதரவற்றோரிடமும், ஏழைகளிடமும், எப்போதும் உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களிடமும், பயணிகளிடமும், உங்கள் பணியாளர்களிடமும் அன்பு செலுத்துங்கள்’’ ‘‘பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், கைதிகளை விடுவியுங்கள், பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள், பிறர் மீது பெறாமை கொள்ளாதீர்கள், பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள்.
‘‘உங்கள் வாக்குறுதியைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறாதீர்கள்’’–
                                                                                                    மேலும், . . . . . 

No comments:

Post a Comment