Sunday 13 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர் - தகவல்கள்

புதுடெல்லி, 13-07-2014,
சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்தனர் என்று மத்திய புலனாய்வு பிரிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 10-ம் தேதி பரஸ்கானா போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவத்தில் பரஸ்கானா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் குலாப் கேடேகர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
                                                                                                     மேலும், . . . 

பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்து கொலை? நிர்வாண நிலையில் உடல் கிடந்தது

சிதம்பரம், 13-07-2014,
பள்ளி மாணவியை யாரோ கடத்தி கற்பழித்து கொலை செய்துள்ளனர். நிர்வாண நிலையில் அந்த மாணவியின் பிணம் கிடந்தது.
பள்ளி மாணவி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர். திட்டில் உள்ள ஓடையில் கடந்த 10–ந் தேதி 15 வயது மதிக்கத்தக்க சிறுமி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். கிள்ளை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் பள்ளிக்கூட புத்தகப்பை, பள்ளி சீருடை, ரோஸ் நிறத்தில் ஒரு சுடிதாரும், பச்சை நிறத்தில் ஒரு சுடிதாரும், வெள்ளை நிறத்தில் ஒரு ஜோடி காலணி ஆகியவை கிடந்தன. அந்த பையில் இருந்த ரப்பரில், ‘செல்வி, 10–ம் வகுப்பு’ என்று எழுதியிருந்தது. இதன்மூலம் இறந்துகிடந்த சிறுமி, பள்ளி மாணவி என்பது தெரியவந்தது.
                                                                                                                மேலும், . . . 

உ . பி., கவர்னராக ராம்நாயக் ?
புதுடில்லி, 13-07-2014,
உ .பி., மாநில கவர்னராக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்நாயக் நியமிக்கப்படுகிறார். ராம்நாயக் அரசியலில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர் என்பதால் இவருக்கு இந்த பதவியை வழங்கிட உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மத்தியில் மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் காங்கிரஸ் கட்சியின் விசுவாசிகளான கவர்னர்களை மாற்ற பா.ஜ., அரசு முடிவு செய்தது. உ .பி., மேற்குவங்கம், கோவா, சட்டீஸ்கர் மாநில கவர்னர்கள் ராஜினமா செய்தனர். புதுச்சேரி கவர்னர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் நிரப்பப்பட வேண்டிய கவர்னர் போஸ்டிங் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
                                                                                                    மேலும், . . . 

நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும்மருத்துவமனைகள்


சென்னை, 13-07-2014,
நோயாளிகளுக்கு பொருத்தும் மருத்துவ சாதனங்களான ஸ்டென்ட்ஸ்(ட்யூப் வடிவிலான குழாய்), இம்ப்ளான்ட்ஸ்(பிளேட்டுகள் மற்றும் இதர சாதனங்கள்), பேஸ் மேக்கர் போன்றவைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் விலை கேட்டாலே மாரடைப்பு ஏற்பட்டுவிடும். அதன் வழக்கமான விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்த்தி மருத்துவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த சாதனங்கள் வெளிச்சந்தையில் கிடைக்காததால், நோயாளிகளும் இந்த விலைகளை சரிபார்க்க முடியாது. அதனால் பணயக்கைதி நிலையில் உள்ள நோயாளி மருத்துவர்கள் கேட்கும் தொகையைத் தான் கட்டவேண்டி இருக்கிறது. அநேக மருத்துவமனைகளில் இந்த சாதனங்கள் அன்றாடம் பல நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதால் மருத்துவமனையின் ஒட்டுமொத்த லாபத்தில் 30 சதவிகித தொகையை இச்சாதனங்கள் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
அந்த நோயாகளிடம் அளவுக்கதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது.
                                                                                                                       மேலும், . . . .

No comments:

Post a Comment