Saturday 12 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

11 மாடி கட்டிட விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

சென்னை, ஜூலை, 12–07-2014,
போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந்தேதி 11 மாடிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையிலும் புலன் விசாரணை நடைபெறுகிறது.
ஆனால் இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வந்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை,
                                                                                                        மேலும், . . . 

இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம், ஜூலை, 12–07-2014,
இலங்கையால் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரும் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் கடந்த 28–ந் தேதி கடலுக்கு மீன் பிடித்து கொண்டு இருந்த 17 மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதேபோல், கடந்த 5–ந் தேதி ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 20 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 37 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி மத்திய அரசுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
                                                                                                                           மேலும், . . .

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டிக்கு தடை விதிப்பதா?: ராமதாஸ் கண்டனம்
சென்னை, ஜூலை, 12–07-2014,
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நேற்று மாலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்குக் காரணம் அவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்திருந்தது தானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞரும் அவமதிக்கப்பட்டிருப்பது
                                                                                                          மேலும், . . . 

நவீன படுக்கை வாங்கி தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலைவீச்சு

மதுரை, ஜூலை, 12–07-2014,
மதுரை கே.கே.நகரில் ‘தனிஷ் கிப்ட்ஸ்’ என்ற பெயரில் கடை நடத்தி வந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் ராஜ்குமார். இவர் குவைத்தில் ஒரு கம்பெனியில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த கம்பெனியில் தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட நவீன படுக்கைக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், அதை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும் ஜெயலட்சுமி பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
                                                                                              மேலும், . . .

No comments:

Post a Comment