Sunday 17 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் முன்பு சீமான் முற்றுகை போராட்டம்

சென்னை, ஆகஸ்ட், 17-08-2014,
இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், இன்று தொடங்கி வருகிற 19–ந்தேதி வரை நடைபெறும் இலங்கை ராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலைக்கோட்டு தயம், அய்யநாதன், அன்பு தென்னர சன், தங்கராசு அமுதா நம்பி, அறிவுச் செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் சீமான் பேசியதாவது:–
ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் தனது ராணுவ இணைய
                                                                                 மேலும், . . . . 

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜெயலலிதா ராமதாஸ்–விஜயகாந்த் வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட், 17-08-2014,
தமிழக பா.ஜனதா தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பா.ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
அவருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
தாங்கள் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                      மேலும், . . . .

தடை நீக்கம்: மாநாடு வெற்றி பெற தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் - திருமாவளவன்

சென்னை, ஆகஸ்ட், 17-08-2014,
சேலத்தில் இன்று மாலை நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கல்வி உரிமை மாநாட்டிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் 144 (ஏ) தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். சேலம் மாவட்ட எல்லைக்குள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
சேலம் மாவட்ட கலெக்டரின் தடை குறித்து சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் அந்த மாநாட்டிற்கு கலெக்டர் விதித்த தடையை விலக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாடகை வானங்களில் கட்சி கொடியுடன் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:–
                                                                                               மேலும், . . . . .

கன்டெய்னரில் கடத்தப்பட்ட இந்தியர்கள் லண்டனில் வெளியேற்றி விசாரணை

லண்டன், ஆகஸ்ட், 17-08-2014,
சரக்கு கப்பல் மூலம் கன்டெய்னரில் அடைக்கப்பட்டு சிலர் லண்டனுக்கு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வந்த 35 பேரும் இந்திய தீபகற்ப பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வந்த நபர்களில் ஒருவர் மூச்சு திணறி இறந்த நிலையில் கிடந்தார்.
பெல்ஜியம் பகுதியில் இருந்து இந்த கப்பல் லண்டன் நோக்கி வந்துள்ளது. இசக்ஸ் தில்புரி துறைமுகத்தில் 35 பேரையும் இறக்கி விசாரித்து வருகின்றனர். இது போன்று வேறு கன்டெய்னரில் யாரும் அடைக்கப்பட்டுள்ளார்களா என அனைத்து கன்டெய்னர்களும் பரிசோதிக்க இமிகிரேஷன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மயக்கமுற்ற நிலையில்
இந்த கப்பலில் வந்தவர்கள் இந்திய துணை தீப கற்பபகுதிளை சேர்ந்தவர்கள் விசாரித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                    மேலும், . . . .. 

No comments:

Post a Comment